The mother of the famous actor asked me the girl - Priyamani
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
பிரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில் தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது பிரியாமணிக்கும் தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது. தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது நேரம் பேசினார். நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் பின்னர் தருண் அவரது அம்மாவிடம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார். என்றார்.
பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…