பெருங்காய நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கு பயன்படுத்துவது பெருங்காயம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. பெருங்காயத்தில் ஏற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பெருங்காய நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வயிற்று வலி அஜீரணம் போன்ற பிரச்சனையை சரி செய்யவும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பெருங்காயம் நீர் உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுப்படுத்தவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பெருங்காயம் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பெருங்காயம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.