மாரடைப்பு வருவதை நாம் முன்னரே எப்படி தெரிந்து கொள்வது என்று தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாக உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
அதனை முதலிலேயே பார்த்து சரி செய்து தீர்வு காண்பது சிறந்தது.
முதலில் மாரடைப்பு வருவதற்கு முன் வாந்தி தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும் உடலில் ரத்த ஓட்டம் செல்லாததால் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக நாம் நடக்கும் போதும் படிக்கட்டு ஏறும்போதும் மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதையும் மூச்சு விடவே சிரமப்படுவதையும் காணலாம் அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம்.
மூன்றாவதாக மாரடைப்பின் போது மார்பு பகுதியில் வலியும் மார்பு எலும்பு நடுவில் அதிகமாக வலி இருக்கக்கூடும் இப்படி இருக்கும் போது நாம் அசோகரியத்தை உணரலாம்.
இறுதியாக நம் உடலில் வியர்வை திடீரென உயர்த்துவிட்டால் இந்த அறிகுறி இதயத்திற்கானதாகும். மேலும் உணவு சாப்பிட்டவுடன் வயிற்றில் எரிச்சலையும் உணரலாம். இதுவும் மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருக்கும்.
எனவே இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உடல் நலத்தை சரி செய்து ஆரோக்கியமாக வாழ்வது சிறந்தது.

