Supreme Court orders AR Rahman to pay Rs. 2 crore!
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரித்தது.
ஏ.ஆர்.ரகுமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வீர ராஜா வீரா’ பாடலுக்கு திரையில் பாடகர்கள் பயஸ் வாசிஃபுதீன் தாகர், நசீர் ஜாஹீருதீன் சாகர் பெயர்களை குறிப்பிட்டு அனைத்து சமூக வலைத்தளங்கள், ஓடிடி தளங்களில் அங்கீகரிக்கப்படும் என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்காக 5 வாரகால அவகாசம் வழங்கியது.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் 2 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் வசம் இருக்கவும், நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகளை கணக்கில் கொள்ளாமல் சிவில் வழக்கை சுதந்திரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…