Supreme Court orders AR Rahman to pay Rs. 2 crore!
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரித்தது.
ஏ.ஆர்.ரகுமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வீர ராஜா வீரா’ பாடலுக்கு திரையில் பாடகர்கள் பயஸ் வாசிஃபுதீன் தாகர், நசீர் ஜாஹீருதீன் சாகர் பெயர்களை குறிப்பிட்டு அனைத்து சமூக வலைத்தளங்கள், ஓடிடி தளங்களில் அங்கீகரிக்கப்படும் என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்காக 5 வாரகால அவகாசம் வழங்கியது.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் 2 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் வசம் இருக்கவும், நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகளை கணக்கில் கொள்ளாமல் சிவில் வழக்கை சுதந்திரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தது.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…