Supreme Court orders AR Rahman to pay Rs. 2 crore!
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரித்தது.
ஏ.ஆர்.ரகுமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வீர ராஜா வீரா’ பாடலுக்கு திரையில் பாடகர்கள் பயஸ் வாசிஃபுதீன் தாகர், நசீர் ஜாஹீருதீன் சாகர் பெயர்களை குறிப்பிட்டு அனைத்து சமூக வலைத்தளங்கள், ஓடிடி தளங்களில் அங்கீகரிக்கப்படும் என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்காக 5 வாரகால அவகாசம் வழங்கியது.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் 2 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் வசம் இருக்கவும், நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகளை கணக்கில் கொள்ளாமல் சிவில் வழக்கை சுதந்திரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தது.
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை…