மாமன் படம் வெற்றி பெற்றுள்ளதால் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சூரி.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி தற்போது இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், சுவாசிகா,பாலசரவணன், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி ஏழு நாட்களில் 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் நிலையில் தற்போது சூரி படம் வெற்றி பெற்றதற்கு நன்றி கூறும் விதமாக மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.