தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்..

70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில்,

’13 ஆண்டுகளுக்கு முன் பிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல்ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்போது அவர், ‘எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும்’ என்று கூறினார்.

அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று பிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Sivakarthikeyan spoke on stage about Dhanush
dinesh kumar

Recent Posts

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

1 hour ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

2 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

3 hours ago

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…

3 hours ago

விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய ஷாலினி அஜித்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…

23 hours ago

அஜித்தின் வரலாறு படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணலான்னு இருந்தேன்.. ஆனால்? கே எஸ் ரவிக்குமார் சொன்ன ரகசியம்..!

அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

23 hours ago