Sivakarthikeyan creates history for the first time
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தொகுப்பாளர், காமெடி நடிகர், என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தற்போது நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் அடுத்ததாக மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு சொந்தக்காரராக உள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகருக்கும் சொந்தமாக திரையரங்கம் இல்லாத நிலையில் அந்த வரலாற்றை மாற்றி எழுத உள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தொடர்ந்து நடிகர்களுடன் இணைந்து பல புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி வருகிறது. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் இணைந்து திரையரங்குகளை கட்டி உள்ள நிலையில் அடுத்ததாக சென்னையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையரங்கை கட்ட உள்ளதாக ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சார்ந்த சுனில் நரங் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…