siruthuli-founders-planned-about-vivek
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் விவேக். இவர் எப்பொழுதுமே பலவிதமான கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மிக அதிகம். இந்நிலையில் விவேக் அவர்கள் மரணம் அடைந்த பிறகு இவரின் நினைவாக சிலபேர் அவரின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு சமர்ப்பித்தனர்.அந்த வகையில் மறைந்த விவேக் அவர்களுக்காக கோவையில் சிறுதுளி அமைப்பினர் ‘பீ ஹேப்பி’ என்று அவர் சினிமாவில் அடிக்கடி கூறும் வார்த்தையை தலைப்பாக வைத்து ஒரு வனப்பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக இந்தப் பூங்காவை பேரூர் செட்டிபாளையம் சென்ட்ரல் எக்ஸைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வனத்திற்கான பூமி பூஜை சிறுதுளி அமைப்பின் 19 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பச்ச பாளையத்தில் நடத்தினர். இந்த விழாவில் பேரூர் செட்டி பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதையடுத்து இந்த பூங்காவை பற்றிசிறுதுளி அமைப்பு உறுப்பினர் சில விஷயங்களை கூறியுள்ளனர். அதாவது இயற்கையை மிகவும் நேசித்த பல மரக்கன்றுகளை விதைத்து மக்கள் மனதில் சூழல் ஆர்வத்தை விதைத்தவர். சிறுதுளி அமைப்போடு இணைந்து பல்வேறு சூழல் பணிகளை கோவிலில் செய்துள்ளார். ஆதலால் அவரின் நினைவாக கோவையில் ஒரு ஏக்கரில் ஒரு வனபூங்காவை ‘பீ ஹேப்பி’ வனம் என்ற பெயரில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…