Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாட்டி சொன்ன வார்த்தை. அதிர்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 30-12-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா அத்தை என்று கேட்க நீ என்கூட ஒழுங்கா பாத்துகிட்டு இருந்தா உனக்கு ஒரு பாட்டு பாடவையே வாங்கிட்டு வந்து கொடுத்திருப்பேன் ஆனால் நீதான் அவனை சரியா பாத்துக்கலையே என்று திட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜ் எங்களுக்கு எதுவும் இல்லையா பாட்டு என்று கேட்க நான் என்ன வெளிநாட்டில் இருந்தா வந்து இருக்கேன் நானே என் புள்ளைக்கு உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டதும் பதறியடித்து ஓடி வந்தேன் என கூறுகிறார்.

அதன் பிறகு முத்து எங்கே என்று கேட்க மீனா அவர் உங்ககிட்ட பேச மாட்டேன்னு ரூம்ல இருக்காரு என்று சொன்னதும் அவனை எப்படி எனக்கு வெளியே கொண்டு வரணும்னு தெரியும் நீ அந்த கதவை மட்டும் திறந்துவிடு என்று சொல்லிவிட்டு சீம்பாலை எடுத்து எல்லோருக்கும் கொடுக்க அதை பார்த்து முத்து வெளியே ஓடி வருகிறார்.

பிறகு முத்து விதம் இனிமே எதுவும் என்கிட்ட மறைக்கக்கூடாது என்று சொல்ல அப்பா தான் சொல்ல வேண்டும் என்று சொல்லிட்டாரு அதனாலதான் சொல்லல இனிமே எதுவும் மறைக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

பிறகு மீனா சாப்பாடு ரெடியா எல்லாரையும் வர சொல்லிட்டியா என்று கேட்க அண்ணாமலை ஏன் அதையும் நீ சொல்ல மாட்டியா என்று கேள்வி கேட்கிறார். உடனே விஜயா உங்கம்மா தான் வந்தது என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேள்வி கேட்கிறார். மேலும் இவர் தான் எல்லாத்தையும் பத்தி வச்சிருக்கேன் என்று சொல்ல மீனா பாட்டியிடம் சொன்னதற்கான காரணத்தைக் கூற வெளியே வரும் பாட்டி நீ நல்ல மருமகளா நடந்துக்கல ஆனா மீனா நடந்துக்கிட்டா அவகிட்ட இருந்து கத்துக்கோ என்று சொல்கிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட வந்துவிட பாட்டி முத்துவையும் கூப்பிட அங்கே இடம் இருக்காது அத்தை அவ அப்புறம் சாப்பிடட்டும் என்று விஜயா சொல்ல எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடணும் சேர் எடுத்து போடு என்று சொல்லி மொத்த பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.

இப்படி மூணு பேர புள்ளைங்க மூணு பேத்திங்கனு எல்லாருடனும் ரொம்ப இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. எப்படி எல்லாரும் சீக்கிரம் குழந்தையையும் பெத்து கொடுங்க. யார் முதல்ல நல்ல விஷயம் சொல்றீங்களோ அவங்களுக்கு பரம்பரை சொத்த எழுதி தருவேன் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

பிறகு பாட்டி எல்லாரையும் பொங்கலுக்கு ஊருக்கு கூப்பிட ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அண்ணாமலை நீ மலேசியாவில் பிறந்த பொண்ணு இதெல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்ல ஊர்ல பொங்கல் செலிப்ரேஷன் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்ன ஆமா அங்கள் எனக்கும் அதெல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு என சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 30-12-23
sirakadikka aasai serial episode update 30-12-23