Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரவியை வரவைத்த மீனா.ஸ்ருதி எடுத்த முடிவு.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 23-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ஒரு பக்கம் ஜெயிலில் இருக்க முத்து அவரை சாப்பிட வைக்க சாப்பாடு கொடுக்க அவர் சாப்பிட மறுக்கிறார்.

மறுபக்கம் சுருதி ரவிக்கு டீ போட்டு கொடுத்து வந்து அவனிடம் சந்தோஷமாக பேச ரவி வீட்டைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார். பிறகு மீனா ரவிக்கு மெசேஜ் அனுப்ப இங்கே ஸ்ருதி தூங்கிய பிறகு ரவி போனை ஆன் செய்ய மீனாவின் மெசேஜை பார்த்து உடனே போன் செய்ய மீனா நடந்த விஷயங்களை சொல்லி உடனே வரணும், உங்களை எப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும் நான் செத்து போன பிறகு கடைசியா என்னை பார்க்க வருவீங்க தானே என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

பிறகு மீனா எங்க மாமா எந்த தப்பும் பண்ணல அதை ரவியே வந்து சொல்லுவாரு ரவி மட்டும் இல்ல ஸ்ருதியும் சேர்ந்து வரா என போலீசிடம் சொல்ல முதலில் அவங்க வரட்டும் வாசுதேவன் வர சொல்லுங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

பிறகு ரவி ஸ்ருதியை கூட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வர முத்து ரவியை போட்டு அடிக்கிறார். பிறகு விஜயாவும் ரவியை போட்டு அறைகிறார். வாசுதேவன் வந்ததும் இவனையும் தூக்கி ஜெயில்ல போட்டு என் பொண்ணை எங்களோட அனுப்புங்க என்று சொல்ல ஸ்ருதி நாங்க விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இரண்டு பேரும் லவ் பண்ணோம்‌. எங்க வீட்ல எனக்கு பிடிக்காத கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்க அதனால்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். நாங்க மேஜர் என சொல்லி வாசுதேவனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். நான் ரவியோட தான் இருப்பேன் என்று ரவியை பிடித்‌து கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 23-10-23
sirakadikka aasai serial episode update 23-10-23