முத்துக்கு வந்து அடுத்த பிரச்சனை.ஸ்ருதி அம்மா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து செட்டுக்கு வர அவர நண்பர்கள் நீ தேவையில்லாம அந்த சிட்டி மேல கைய வச்சதால மூணே நாள்ல மொத்த பணத்தையும் கொடுக்கணும்னு சொல்லிட்டு போயிட்டான். இல்லனா காரை தூக்கிடுவேன்னு மிரட்டுறான். உன்னால எங்க பொழப்பே போச்சு என்று புலம்ப முத்து அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.

இதையடுத்து ரவி மற்றும் ஸ்ருதி சைக்கிளில் ஸ்டுடியோவுக்கு செல்ல ரவி சைக்கிளை மிதிக்க முடியாமல் கஷ்டப்பட சுருதி நீ இறங்கு என்று சொல்லி ரவியை உட்கார வைத்து சைக்கிளை ஓட்டி செல்ல இதை ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விடுகின்றனர். ஸ்ருதியின் அப்பா இவளுக்கு இதெல்லாம் தேவைதான் இன்னும் கொஞ்ச நாள் போனா பிளாட்பார்ம்க்கு வந்துருவா என்று ஆவேசப்பட அவருடைய அம்மா இனிமே சும்மா இருக்க கூடாது. அந்த ரவியை வீட்டோட மாப்பிள்ளையா வர வைக்கணும் அதற்கான வேலையை இன்னையில இருந்தே பண்றேன் என கிளம்பி செல்கிறார்.

அதன் பிறகு முத்து சிட்டியை வந்து பார்த்து எனக்கும் உனக்கும் தான் பிரச்சனை எதுவாக இருந்தாலும் என்கிட்ட பேசு எதுக்கு கார தூக்கிடுவேன்னு பசங்களை மிரட்டுற? அவங்க வட்டியை ஒழுங்கா கட்டிக்கிட்டு தானே இருக்காங்க என்று சொல்ல சிட்டி எனக்கு பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. என்னை அடிச்சதுக்கு நான் எப்படி மனதை தேத்திக்கிறது? வேணும்னா ஒன்னு பண்ணலாம் நாளைக்கு செட்டுக்கு வர நீ என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. வட்டியை கூட தள்ளுபடி பண்ணிடறேன் அசல மட்டும் கொடுக்கட்டும் அது அவங்க எப்ப முடியுமோ அப்ப தரட்டும் என்று சொல்ல முத்து வண்டி மேல மட்டும் கைய வச்சு பாரு அப்புறம் இருக்கு என்று சொல்லி கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்த முத்துவிடம் மீனா பேசாமல் இருக்க முத்து உண்மைய சொன்னா இன்னும் நீ கவலைப்படுவ, உன் தம்பி மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க என்று மனதிற்குள் பேசிக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட மீண்டும் மீனா அருகே வந்து நிற்க தூக்கத்திலிருந்து மீனா கண் விழித்ததும் தண்ணீர் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இனிமே இப்படி பண்ண மாட்டேன் ஒரு வார்த்தை கூட இந்த மனுஷனால சொல்ல முடியல அப்படி இருக்கும்போது நானா எதுக்கு போய் பேசணும் என்று மீனாவும் பேசாமல் படுத்து விடுகிறார்.

மறுநாள் சிட்டி செட்டுக்கு வந்து காரை எடுக்க போக அங்கு வரும் முத்து தடுத்து நிறுத்த சிட்டி நீ வருவேனு தெரியும் முத்து. கோவில்ல வந்து வேற மாதிரி நேரா கால்ல விழு என்று சொல்ல முத்துவும் பின்னாடி போய் கால்ல விழுவது போல் பில்டப் கொடுத்து இங்கு இருந்து எட்டி உதைச்சா நெஞ்செலும்பு முறிஞ்சு போயிடும் என்று வார்னிங் கொடுக்கிறார். எல்லாரும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு சிட்டியை துரத்தி விடுகின்றனர்.

பிறகு செல்வம் பணத்துக்கு என்ன பண்ண என்று கேட்க காரை வித்துட்டேன் என்று சொல்ல செல்வம் நீ என்னப்பா பண்ணுவ என்று கேட்க கார் கூடவேவா பொறந்த? இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை செய்து எப்படியும் பொழச்சிப்பான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 20-02-24
jothika lakshu

Recent Posts

எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..!

எப்போதும் 'பவுன்சர்கள்' சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா,…

2 minutes ago

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

5 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

6 hours ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

6 hours ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

23 hours ago