தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட் வீட்டுக்கு வந்த பாட்டி விஜயாவை போட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க அண்ணாமலை வந்ததும் அவரை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார்.
அண்ணாமலை எனக்கு ஒன்னும் இல்லம்மா என்று சொல்ல எல்லாம் இந்த விஜயவால வந்தது. உன்ன சரியா பாத்துக்காம நெஞ்சுவலி வர வச்சுட்டா என்று சொல்கிறார்.
பிறகு பாட்டி ரவி மனோஜ் என எல்லாரையும் உண்மையை சொல்லாமல் மறைத்து விட்டீர்கள் என திட்ட அண்ணாமலை வந்து உட்காருங்கள் என்று கூட்டிச்சென்று உட்கார வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்து பார்ட்டி சென்றதும் ஆசையாக கட்டி பிடிக்கச் செல்ல நீயும் என்கிட்ட எதுவும் சொல்லாமல் மறைச்சிட்ட என்று பளார் என்று அடி கொடுக்கிறார்.
பிறகு ரூமுக்குள் வந்த முத்து மீனாவின் வாய பொத்தி உன் வாயால தான் பிரச்சனையை எதுக்கு பாட்டி கிட்ட சொன்னேன் என்று கிட்ட மீனா இல்லனா பாட்டி தான் அவமானப்பட்டு இருப்பாங்க என்று ரவிக்கு பொண்ணு பார்த்த விஷயத்தையும் கூறுகிறார்.
அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஜயாவை வாரி விடும் பாட்டி குலதெய்வ கோவிலில் பூஜை செய்து பிரசாதம் எடுத்து வந்திருப்பதாக கொடுக்கிறார். மேலும் ஸ்ருதிக்கு புடவை ஒன்றை எடுத்து வந்து கொடுக்கிறார். ரவி ஆசையாக எனக்கு ஏதும் இல்லையா பாட்டி என்று கேட்க அவரை அருகில் கூப்பிட்டு நீ செஞ்ச வேலைக்கு இதான் என ஒரு அடி கொடுக்கிறார்.
மீனாவை உட்கார வைத்து விஜயாவை வேலை வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
