ரோகினிக்கு வந்த ஃபோன் கால். சந்தேகத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணியின் அம்மா ரோட்டில் நடந்து வந்து திடீரென மயக்கம் வந்து கீழே சரிய அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் ரோகினிக்கு போன் செய்ய விஜயா ஃபோனை எடுக்க கல்யாணி எப்படி இருக்க இப்ப உன்கிட்ட பேசலாமா என்று இவர் கேட்க விஜயா கல்யாணியா யார் நீங்க என்று கேள்வி கேட்க சுதாரித்துக் கொள்ளும் லட்சுமி தப்பான நம்பருக்கு போன் பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க என சமாளித்து போனை வைக்கிறார். இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று விஜயாவுக்கு சந்தேகம் வருகிறது.

அதைத்தொடர்ந்து ரோகிணி துணிகளை துவைக்க எடுத்து வர விஜயா நீ எல்லாம் அதை அப்படி போட்டுட்டு வா அந்த மீனா துவைப்பா நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்கிறாய் என்று சொல்ல பிறகு மீனா அவரது துணிகளை எடுக்க வர ஒரு குச்சியை வைத்து மனோஜின் ஜட்டியை எடுத்து போட விஜயா அது எதுக்கு போடுற என்று கேட்க அது அவரோடது கிடையாது என்று சொல்ல அவன் 100 ரூபாய்க்கு நான்கு வாங்குறவன் அது காஸ்லி ஜெட்டி மனோஜ் யூஸ் பண்றது, எல்லாத்தையும் எடுத்துட்டு போய் துவை என்று சொல்கிறார்.

என் புருஷனோடது மட்டும் தான் என்னால துவைக்க முடியும் என்று சொல்ல விஜயா மீனாவை திட்டி மொத்த துணிகளையும் துவைக்க வைக்கிறார். மறுபக்கம் முத்து தன்னுடைய டிரைவர் நண்பர்களை கூப்பிட்டு வைத்து குழந்தை எப்ப பிறக்கும் என்று கேட்டு கன்பூஸ் ஆகிறார்.

அடுத்து அண்ணாமலை கோர்ட் கேஸ் ஞாபகம் வந்து முத்து வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். கோர்ட்டில் அண்ணாமலை மற்றும் உயர் அதிகாரி என இருவரையும் உட்கார வைத்து நீதிபதி விசாரணை செய்ய அண்ணாமலை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி தன்னுடைய பென்ஷன் பணத்தை நீங்கள் தான் வாங்கி தரணும் என கோரிக்கை வைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஸ்ருதியின் அப்பா குறுக்க பேசி பல்பு வாங்குகிறார். பிறகு அங்கு வரும் முத்து இவரைப் பார்த்து நீயும் இங்கதான் இருக்கியா என் அப்பாவோட பென்ஷன் பணத்தை தராமல் வைத்திருக்க நீ யாரு என்று கோபப்பட நீதிபதி இவர் யார் என்று கேட்க இவன் தான் என்னுடைய சின்ன பையன் முத்து, இவன் தான் அவர் மேல கை வச்சுட்டான் என்று அண்ணாமலை சொல்ல நான் வேணும்னு கை வைக்கவில்லை ஐயா.. இவர் என் அப்பாவை பத்தி தப்பா பேசினாரு அதனாலதான் கை வச்சேன் நீங்க உங்க அப்பாவ பத்தி தப்பா பேசினா சும்மா இருப்பீகளா என்று கேள்வி கேட்கிறார்.

உயர் அதிகாரி அண்ணாமலை மீது குற்றம் சாட்ட எதை எதையோ காரணம் சொல்ல நீதிபதி நீங்க சொந்த பகை காரணமாகத்தான் பணத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க, அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்று சத்தம் போட்டு அவருக்கு சேர வேண்டிய பென்ஷன் பணம் மொத்தத்தையும் செட்டில் செய்ய வேண்டும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக உங்க சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என உத்தரவு போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

3 hours ago

சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…

3 hours ago

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சிலந்தி 2!

சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…

3 hours ago

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…

3 hours ago

சாலை விபத்தில் நடிகர் பரத் காந்த் உயிரிழப்பு

பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…

4 hours ago

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

21 hours ago