ரோகிணியுனுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட மனோஜ். கோபத்தில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி என இருவரும் பார்ட்டிக்கு செல்ல அங்கு நடக்கும் போட்டிகளில் இருவரும் கணவன் மனைவியாக பங்கேற்று அடுத்தடுத்து வெற்றி பெறுகின்றனர். கடினமான போட்டிகளில் இருவரும் நெருக்கமாக நின்று வெற்றி பெறுகின்றனர்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த மீனா முத்து உடன் சென்ற இடத்தில் நடந்த விஷயங்களை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். குடிபோதையில் வீட்டுக்கு வரும் முத்து அவரது அப்பா தூங்காமல் உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஏன்பா இன்னும் தூங்காம இருக்க என கேட்க உன்னை மாதிரி ஒரு புள்ளையை பெற்று வச்சிட்டு எப்படி நான் நிம்மதியா தூங்குறது என வருத்தப்பட முத்து ஏன் பா இப்படி பேசுற என கேட்கிறார்.

நீயும் மீனாவும் ஒண்ணா தானே போனீங்க மீனா மட்டும் எதுக்கு தனியா வந்தாள்? அங்க என்ன நடந்துச்சு என கேட்க முத்து அவ என்ன அசிங்கப்படுத்திட்டு வந்துட்டா என சொல்ல அங்கு என்ன நடந்திருக்கும் என்று எனக்கு நீ சொல்லாமலேயே தெரியும். உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா நல்ல வாழ்க்கை வாழ வழிய பாரு என அறிவுரை சொல்லிவிட்டு ரூமுக்குள் எழுந்து சென்று விடுகிறார்.

உள்ளே வரும் முத்து மீனா படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து இவ மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருக்கா என புலம்பி அங்கிருக்கும் தண்ணீர் டிபனை திறக்க போக அது சிதறி மீனாவின் முகத்தில் விழுந்து அவர் பதறி எழுந்து கொள்கிறார். என்னத்த கொட்டுனீங்க தண்ணியா இல்ல வாந்தி எடுத்தீர்களா என மீனா கேட்க வாந்தி எல்லாம் எடுக்க மாட்டேன் எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியா இருப்பேன். தண்ணி திறக்கும் போது தவறி விழுந்துடுச்சு ரொம்ப பண்ணாம படுத்து தூங்கு என சொல்ல மீனா பாத்ரூம் சென்று முகத்தை அலம்பி கொண்டு வருகிறார்.

பிறகு முத்து மீனாவிடம் பேச எதுவும் பேச வேண்டாம் நான் எதுவும் கேட்கவும் தயாராக இல்லை பேசவும் தயாரா இல்லை என சொல்லி அங்கிருந்து நகர்கிறார்.

மறுநாள் காலையில் மீனா எழுந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது நடந்த விஷயங்களை நினைத்து பார்த்துக் கொண்டிருக்க அங்கு வரும் முத்துவின் அப்பா அண்ணாமலை மீனாவிடம் பேச மீனா என் வாழ்க்கை இப்படியா இருந்துமா என எனக்கு தெரியல என வருத்தப்படுகிறார்.

உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நம்பிக்கையை கொடுக்கறதா என எனக்கு தெரியல என அவரும் வருத்தப்படுகிறார். சரிங்க மாமா நீங்க வாக்கிங் போயிட்டு வாங்க நான் அதுக்குள்ள காபி போட்டு வைக்கிறேன் அத்தையும் எழுந்துருவாங்க காபி கொடுக்கணும் அவருக்கு துணிமணி எடுத்து கொடுக்கணும் எனக்கு வேலை இருக்கு என சொல்ல அண்ணாமலை எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

இதையெல்லாம் ஒட்டு கேட்ட விஜயா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

12 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

12 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

16 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

16 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

19 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago