ரோகினி போட்ட திட்டம். அதிர்ச்சியில் பாட்டி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா காலையில் எழுந்து சாணி தெளித்து கோலம் போட அதை பார்த்த அண்ணம்மா இதையெல்லாம் நீ ஏம்மா பண்ற என்று கேட்க சென்னையில காலையில அஞ்சு மணிக்கு எழுந்து இதையெல்லாம் பண்ணிடுவேன். இங்கு பாட்டி வீட்டுல கோலம் போடணும்னு ஆசையா இருந்துச்சு அதான் போட்டேன் என்று சொல்கிறார்.

அதன் பிறகு உள்ளே போன மீனா நேராக விளக்கேற்ற அதை பார்த்த அன்னம்மா என்னம்மா மீனா குளிக்காம கொள்ளாம விளக்கேத்துது ஏதோ தப்பா தெரியுது என்று சொல்ல பாட்டி முத்து மீனாவின் ரூமை திறந்து பார்க்க முத்து கீழே படுத்து தூங்குவதை பார்த்து இருவருக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறார். இதனால் அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர ரோகிணி அவரை வரவேற்று உட்கார வைக்க மனோஜ் தலை வலிக்குது என்று சொல்ல ரோகிணி மசாஜ் செய்துவிட தனக்கு வேலை போன விஷயத்தை சொல்ல ரோகிணி எப்படி என்னாச்சு என்று கேட்க ஆபீஸில் நடந்த அனைத்தையும் சொல்கிறார்.

அதன் பிறகு ரோகிணி கோபப்படுவார் என மனோஜ் எதிர் பார்க்க அவர் தன்னுடைய தோழி திவ்யாவுடன் சேர்ந்து சிரிக்கிறார். பிறகு மனோஜ்க்கு இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை இப்போதைக்கு வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் ஆபீஸ் போற மாதிரி பியூட்டி பார்லர் கிளம்பி வந்துடு வேற வேலைக்கு அப்ளை பண்ணலாம் என்று ஆறுதல் சொல்ல மனோஜ் இதை இவ்வளவு ஈஸியா எடுத்துப்பேணு நினைக்கவே இல்லை என சந்தோஷப்படுகிறார்.

பிறகு ரோகிணியின் தோழி கிடைச்ச வேலையைக் கூட காப்பாத்திக்க தெரியல இவனை கட்டிக்கிட்டு நீ எப்படி சந்தோஷமாக வாழ்வ என கேட்க அவன்கிட்ட சில குறை இருக்கு தான், அதெல்லாம் நான் ஏத்துக்கிட்டா தான் என்கிட்ட இருக்க குறைகளை அவன் ஏத்துக்குவான் என்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.

அதன் பிறகு டப்பிங் ஸ்டூடியோவில் ஸ்ருதி ஒரு சீரியலுக்கு கண்ணீருடன் டப்பிங் பேச பிறகு தனக்கு போர் அடிக்குது சாப்பிட்டு வரேன் என சொல்லி ஆபீஸில் வேலை பார்க்கும் பையனிடம் பணத்தை கொடுத்து வித்தியாசமாக ஏதாச்சு வாங்கிட்டு வர சொல்லி அனுப்ப அவன் ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்து வித்தியாசமான டிஷ் வேணும் என கேட்க அங்கிருந்தவர் ரவியை கூப்பிட்டு விடுகிறார்.

பிறகு அந்தப் பையன் சுருதிக்கு போன் செய்து கொடுக்க ரவி வித்தியாசமா ஒரு டிஷ் பண்ணி இருக்கேன் என்று சொல்ல சுருதி என்ன என்று கேட்க தோசை என்று சொல்ல கடுப்பாகிறார். பிறகு சவர்மா தோசை என்று சொல்லி அதைப்பற்றி பேச ஸ்ருதி சரி கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்கிறார்.

ரவி சாப்பாடு பற்றியும் கஸ்டமரின் உடல்நிலை பற்றியும் பேசிய விஷயங்கள் ஸ்ருதியின் மனதை கவருகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

‘சிஸ்டம்’ படத்தில் அபார நடிப்பு: ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருதை வென்ற ஜோதிகா!

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…

7 hours ago

டேட்டிங் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…

8 hours ago

61 வயதில் மூன்றாவது திருமணத்தை உறுதி செய்த அமீர் கான்!

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…

8 hours ago

இசையுலகில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்… அடுத்தடுத்து காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…

8 hours ago

மாஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் அதர்வா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…

8 hours ago

கட்டா குஸ்தி 2 – திரை விமர்சனம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…

8 hours ago