Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

SiragadikkaAasai Serial Episode Update 30-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா உட்கார்ந்து கொண்டிருக்க க்ரிஷ் பயமுறுத்த சோபா மீது ஏறி குதிக்க விஜயா அலறுகிறார். உடனே கிருஷ் திட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர். இப்ப எதுக்கு அவனை திட்டி கிட்டு இருக்கீங்க என்று கேட்க குரங்கு மாதிரி குதிச்சுக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதி மனுஷங்க குரங்குல இருந்து தான் வந்ததா சொல்றாங்க என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் க்ரிஷ் மீது கோபப்பட ரோகிணி தடுத்து சின்ன பையன் தானே விடு என்று சொல்லுகிறார்.

உடனே விஜயா இதுவா சின்ன பையன் என்று சொல்லிவிட்டு இரண்டு அடி போடுற என சொல்ல முத்து கைய வச்சா அவ்வளவுதான் என்ன சொல்லுகிறார் உடனே அருணாச்சலம் வந்துவிட குழந்தை கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா என்று கேட்கிறார் விஜயா இந்த பையன் வந்ததிலிருந்து தான் ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு என்று கோபப்பட அண்ணாமலை கிருஷ் அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு விஜயா இந்தப் பையனால ஒரு நாள் உங்க வீட்ல பெரிய பிரச்சனை வரப்போகுது அன்னைக்கு தெரியும் என சொல்ல பார்வதி பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்.

என்னாச்சு பார்வதி என்ன விஷயம் என்று கேட்க ரதி மற்றும் தீபன் குடும்பத்தினர் வந்து 10 லட்சம் நஷ்டம் இருக்கட்டும் உள்ளதாக சொல்லுகின்றனர். அவங்க பணம் கேக்குறதுக்கு காரணம் மனோஜ் தான் என்று முத்து சொல்லுகிறார் அவன் தான் பணத்தை கொடுத்து பேசிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்த விஷயத்தை ரதி குடும்பத்தில் போய் பேசிய விஷயத்தையும் விஜயாவிடம் சொல்லி இருக்கிறார் உடனே கோவப்பட்டது அவர் சொல்றதெல்லாம் உண்மையா என்று கேட்க மனோஜ் ரோகினி சொல்லித்தான் செஞ்சே சொல்லி விடுகிறார்.

உடனே ரோகினி மனோஜ் பார்த்து முறைக்க ஏற்கனவே ஒருவாட்டி திருட்டு நாங்கள் கொடுத்து என்னை மாட்டிவிட பார்த்த இப்போது இதுவரை என்று சொல்ல உங்களை எந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றலாம் உங்களோட கோபம் குறையுறதுதான் நினைச்சேன் மத்தபடி வேற ஒன்னு தான் செய்யல தப்பா நடக்கல என்று சொல்ல அதற்கு விஜயா யோசித்து விட்டு அப்போ எனக்கு இந்த விஷயத்தை எல்லாம் இந்த பணத்தை நீயே கொடுத்தது என்று சொல்ல என்கிட்ட இவ்வளவு பணம் இல்லைஎன்று சொல்ல கோபம் குறையும்ல அதனால குடு குறைந்துவிடும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மனோஜ் மாடியில் அழுது கொண்டிருக்க ரவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க முத்து வருகிறார் வந்தவுடன் என்னாச்சு என்று கேட்க அவன் அழுதுகிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார் எத்தனை விஷயம் என்று கேட்க பத்து லட்சம் பணம் எங்களால் எப்படி கொடுக்க முடியும் என்று சொல்ல ஆரம்பிச்சது நீங்கதான நீங்க தான் கொடுக்கணும் என்று முத்து சொல்லுகிறார். ஏற்கனவே அழுது கிட்டு இருக்க வெறுப்பேத்தாதடா ஏதாவது உதவி பண்ணு என்று சொல்ல உதவி பண்ண எனக்கு என்ன கொடுப்பாய் என்று கேட்கிறார் நான் அப்புறம் என்ன வேணா தரேன் என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் ரவியிடம் உங்க மாமனார் கிட்ட பேசி பணம் வாங்கி கொடுடா என்று சொல்ல அதெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிடுகிறார். மீண்டும் முத்துவிடம் ஏதாவது பண்ணுடா என்று சொல்லு சரி நான் யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் கிச்சனில் ரோகினி அழுது கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் மீனா வருகின்றனர் எதுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க என்று கேட்க நான் ஆன்ட்டிக்கு நல்லது பண்ணதா போன ஆனா என்ன பத்து லட்சம் கொடுக்க சொல்றாங்க என்னால எப்படி கொடுக்க முடியும் என்று பேசுகிறார். அதற்கு ஸ்ருதி மீனா என்ன சொல்லுகின்றனர்? விஜயா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 30-07-25
SiragadikkaAasai Serial Episode Update 30-07-25