SiragadikkaAasai Serial Episode Update 29-04-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி வீட்டில் முத்து பணத்தை எடுத்து விட எடுத்த வேகத்தில் அங்கிருந்து நான்கு பேரும் வெளியில் வேகமாக வருகின்றனர் அப்போது ஸ்ருதியின் முடி கதவில் மாட்டிக் கொள்ள இவர்கள் மூவரும் வெளியில் வந்து விடுகின்றனர் ஸ்ருதி மட்டும் வெளியில் வராததால் இவர்கள் பதட்டத்தில் இருக்க அந்த நேரம் பார்த்து சிந்தாமணி வந்துவிடுகிறார். உடனே ஸ்ருதி அருகில் வந்து நிற்க யாருமா நீ என்ன பண்ற என்று கேட்க ஸ்ருதி தயங்கிக் கொண்டு எனக்கு சரி நீ கொஞ்ச நேரம் இல்ல நான் எனக்கு வயிறு சரி இல்ல நான் போயிட்டு வரேன் என்று சொல்வதற்கு ஓடி வந்து காரில் ஏறி விடுகிறார்.
சிந்தாமணி உள்ளே சென்றவுடன் வேலையாட்கள் வருமானவரித்துறை என்று ஆரம்பிக்க எனக்கு அவசரமா போகணும் அமைதியா இருங்க என்று சொல்லி பாத்ரூம் போகிறார். மறுபக்கம் இவர்கள் காரில் சந்தோஷமாக பேசிக்கொண்டு வர முத்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார் செல்லாமணி வீட்ல இருந்து பணத்தை எடுத்தாச்சு மீனா என்று சொல்ல மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார் உடனே முத்து இன்னும் கொஞ்ச நேரத்துல சிந்தாமணிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லு என்று சொல்ல மீனா ஏதாவது பிரச்சனையாகிடும் என்று சொல்லுகிறார் அது எப்படி பிரச்சினையாகும் பிரச்சனை பண்ணா அந்த அம்மாக்கு தான் சிக்கல் என்று சொல்ல சரி நானும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு நான் பண்றேன்னு சொல்லுகிறார். மறுபக்கம் சிந்தாமணி வந்த பிறகு வருமான வரித்துறையில் இருந்து வந்ததாக சொல்ல நம்ம என்ன கோடிக்கணக்கில் பணம் வச்சிருப்போம் நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்தாங்க என்று கேட்டுக் கொண்டிருக்கும் வந்து என்ன பண்ணாங்க என்று கேட்கிறார் ஐடி கார்டு காட்டுனாங்க அப்புறம் வீட்ல செக் பண்ணாங்க ஒரு மஞ்சப்பை மட்டும் எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொல்ல சிந்தாமணி ஓடிப்போய் பீரோவை செக் பண்ண அது மீனாவிடமிருந்து திருடிய பணம் மட்டும் இல்லாமல் இருக்கிறது.
இதனால் பதறிப்போன சிந்தாமணி கீழே ஓடி வந்து பணத்தை எடுத்துப் போக விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று கோபப்பட்டு அரைகிறார் இதுல ஏதோ தப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா போன் போட்டு சிந்தாமணி போல் பேசுகிறார் என்னம்மா கண்ணு வருமான வரித்துறையில் இருந்து வந்து காசு எடுத்துட்டு போய்ட்டாங்களா என்று கேட்க அவங்க சீக்ரெட்டா வருவாங்க உனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல வந்தது என்னோட வீட்டு ஆளுங்க என்று சொல்லுகிறார் என்ன சொல்ற என்று கேட்க நான் வேணா அமைதியா விட்டுவ என் புருஷன் அப்படி கிடையாது நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவரா இருப்பாரு கெட்டவர்களுக்கு ரொம்ப ரொம்ப கெட்டவரா இருப்பாரு என்று சொல்ல அப்ப இங்க வந்துட்டு போனது என்று சிந்தாமணி கேட்க என் புருஷன் தான் என்று சொல்லுகிறார். கூட இருக்கிறவங்க ஆளுங்க இவ்வளவு முட்டாளா இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது அது சரி உன் கூட இருக்கிறவங்க எப்படி இருப்பாங்க என்று சிந்தாமணியை வெறுப்பேத்துகிறார்.
நான் இப்பவே போலீஸ்க்கு போன் பண்றேன்னு சொல்ல,உடனே பண்ணு சிந்தாமணி முதல்ல நீதான் மாட்டுற இந்த பணம் உனக்கு எப்படி வந்தது என்று தான் கேட்பாங்க என்று சொல்ல சிந்தாமணி அமைதியாகிவிடுகிறார். இப்பயும் சொல்ற வாழு வாழ விடு என்று டயலாக் பேசிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் முத்து வீட்டுக்கு வந்து அண்ணாமலையிடம் முக்கியமான விஷயம்பா சொல்லி சொல்ல மீனாவையும் கூப்பிடுகிறார். முத்து மீனா கிட்ட இருந்து திருடிட்டு போன பணத்தை கண்டுபிடிச்சாச்சுப்பா என்று சொல்ல யார் எடுத்துக்கொண்டு போனது என்று கேட்க வேற யாரும் இல்லப்பா நம்ம அம்மாவோட பிரண்டு தான் என்று சொல்ல விஜயா முழுக்கிறார் யார் என்று அண்ணாமலை கேட்க சிந்தாமணி தான்பா யார் அந்த டெக்கரேஷன் பண்றவங்களா என்று கேட்கிறார் ஆமாம்பா அவங்க தான் பிசினஸ்ல மொதல்ல இருக்கணுமா என்று சொல்ல, அதுக்காக என்ன வேணா பண்ணுவாங்களா என்று அண்ணாமலை கேட்கிறார்.
முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு அண்ணாமலை கேள்வி என்ன? விஜயா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…