ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம் ரவி அண்ணி ரொம்ப பசிக்குது எனக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கறீங்களா என்று கேட்க தோ ரெண்டு நிமிஷம் ரவி தோசை ஊத்தி கொடுக்கிறேன் என சொல்லி கிச்சனுக்கு மீனா போகிறார் உடனே கவனித்த சுருதி உனக்கு சாப்பாடு வேணுமா என நினைத்து விட்டு கிச்சனுக்கு சென்று மீனாவுக்கு தெரியாமல் சட்னியில் உப்பை கொட்டிவிட்டு வந்துவிடுகிறார் உடனே ரவி ஒரு வாய் வைத்த உடன் உப்பு கரிக்கிறது நீ சட்னியில் என்று சொல்ல இல்ல ரவி கரெக்டா தான் போட்டே மாமாவும் அவரும் சாப்பிட்டுதான் போனாங்க எதுவுமே சொல்லலையே என்று கேட்க உடனே ரவி ஸ்ருதி கிச்சனுக்கு சென்றதை யோசித்து விட்டு இதை யார் பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும் நீங்க விடுங்க நான் பிரட்டு ஜாம் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு ஸ்ருதி பாத்ரூமுக்குள் சென்றுவிட சோப்பு கட்டியை மேட்டுக்கு கீழே ரவி வைத்துவிட்டு கட்டில் மீது உட்கார்ந்து பிரட் ஜாம் சாப்பிட சுருதி அதில் காலை வைத்து வழுக்கு விழுந்து விடுகிறார்.

பிறகு அங்கிருந்து வெளியில் வந்து மீனாவிடம் தைலம் கேட்க என்னாச்சு ஸ்ருதி இப்படி நடந்து வரீங்க என்று கேட்கிறார் வழுக்கி விழுந்துட்டேன் மீனா என்று சொல்ல, இவங்க ரெண்டு பேருக்குள்ள எப்பதான் பிரச்சனை தீரப்போறதோ தெரியல என்று முத்துவிடம் சொல்ல அதுக்கு ஏதாவது ஒன்னு பண்ணலாமென்று முத்து சொல்லுகிறார் மறுபக்கம் சீதாவிடம் மேனேஜர் மீண்டும் 5 லட்சம் பணத்தை கொடுத்து கட்டச் சொல்ல சீதா வேண்டா சார் என்ன சொல்லுகிறார் ஏற்கனவே முதல்வாட்டி நடந்த பிரச்சனையிலிருந்து என்னோட மன உளைச்சல் குறையல திருப்ப ஏதாவது நடந்தால் என்னால தாங்க முடியாது அதனால தான் சொல்லுகிறார். எப்பவுமே தப்பு நடக்கணும்னு இல்லம்மா ஏதோ தெரியாம நடந்துடுச்சு அதுக்காக நீ தான் செய்யாம இருக்க முடியுமா நீ தான் போகணும் என்று சொல்ல சீதாவும் யோசித்து விட்டு சரியென சொல்லிவிட்டு பணத்தை வாங்குகிறார் பிறகு ஆட்டோக்காரரிடம் எங்கேயும் நிறுத்த வேண்டாம் நான் என்று சொல்ல இதுக்கு மேல எந்த தப்பும் நடக்காதும்மா பாத்துக்கலாம் என்று அவரும் சொல்லுகிறார் பிறகு வாட்ச்மேன் உடன் சீதா கிளம்புகிறார் மறுபக்கம் சத்யா முத்துவை சந்தித்து மேனேஜரிடம் சொன்ன விஷயத்தை சொல்லுகிறார். அவரும் நியாயமான வட்டியையும் இதுக்கு முன்னாடி அதிகமா குடுத்துகிட்டு இருந்த இடத்துல கம்மியாவும், பேங்க்ல என்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவாங்களோ அதையெல்லாம் பாலோவ் பண்ணலாம் என்று சொன்னதாக சொல்ல அப்ப கூட நீ அந்த வேலையை விடல என்று முத்துவின் முகம் மாறுகிறது சரி சத்யா நீ போ என சொல்லி அனுப்பி விடுகிறார்.

அந்த வழியாக சீதா பணத்துடன் வர ஆட்டோக்காரர் முத்துவை கவனித்து ஆட்டோவை நிறுத்த எதுக்கு ஆட்டோ நிறுத்தினீங்க என்று கேட்க உங்க மாமா என்று சொல்ல அவர் போனா என்ன பணத்தை வைத்துக்கொண்டு எங்கேயும் நிறுத்த வேண்டாம் போகலாம் என்று சொல்ல எனக்கு பணம் கிடைச்சதுக்கு காரணமே அவர்தான் பேசிட்டு வந்துருவேன் என சொல்லி ஆட்டோக்காரர் வேகமாக முத்துவை சந்தித்து பேசுகிறார் ரொம்ப நன்றிப்பா நீ மட்டும் இல்லனா இன்னைக்கு நான் என்ன பண்ணி இருப்பனே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க சீதாவும் வாட்ச்மேனும் வந்து விடுகின்றனர் டைம் ஆயிடுச்சு இதுக்கு நான் இப்ப எங்க டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க ஆட்டோக்காரர் நான் தான் படத்தை திருடனம்மா என்று உண்மையை ஒத்துக் கொண்டு முத்து செய்த விஷயத்தை சொல்ல சீதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு முத்துக்கு போன் வர அவர் சென்று விடுகிறார்.

சந்திராவை வீட்டில் சந்தித்த மீனா எப்படி இருக்க இவ்வளவு நாளாக வந்து பார்க்கலைன்னு தப்பா நினைச்சுக்காத என்று சொல்ல நான் எதுக்குடி தப்பா நினைச்சுக்க போறேன் அதெல்லாம் ஒன்னும் இல்ல மீனா என்று சொல்லுகிறார் நீ சரியா சாப்பிடாதன்னு உனக்கு உடம்பு நல்லா இருக்கும் என்று சொல்ல உடம்பு மட்டும் நல்லா இருந்தா போதுமா மனசு சரியில்ல என்று சொல்லுகிறார் என்னமா பண்றது எல்லாருமே ஒத்துப் போயிட்டாங்க என் புருஷனும் சீதாவோட புருஷனும் தான் புரிஞ்சுக்காம இருக்காங்க சீதாவும் புரிஞ்சுக்காம சண்டை போட்டுக்கிட்டு இருக்கா கண்டிப்பா அவ புரிஞ்சுப்பா என்று சொல்லுகிறார். சொல்லி முடிப்பதற்குள் சேர்த்து அழுது கொண்டே வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இதுக்கு மேல நான் உன்கிட்ட பேசாம இருக்க மாட்டேன் அக்கா என்னோட வேலை கிடைச்சதுக்கு காரணமே மாமா தானே இப்பதான் புரிஞ்சிகிட்டேன் அவங்க என்ன வேணா சண்டை போடட்டுமா எப்பவுமே சண்டை போடக்கூடாது என்று சொல்லுகிறார் பிறகு சீதாவும் மீனாவும் என்ன பேசிக் கொள்கின்றனர்? சீதா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 28-10-25
jothika lakshu

Recent Posts

Hellallallo Video

Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…

8 hours ago

Tomato Thakkali Promo Video

Tomato Thakkali Promo Video | Parimala and Co | Jayaram | Urvasi |Sandy |Sanjana |…

8 hours ago

Roohe Roohe Lyric Video

Roohe Roohe Lyric Video | Habeebi | Shweta Mohan,Kapil Kapilan,Rizwan Shah | Sam CS |…

8 hours ago

Ego Raman Official Trailer

Ego Raman Official Trailer | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…

8 hours ago

IYALISAIYE Lyrical Video

IYALISAIYE Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath |…

8 hours ago

Athiradi Tamil Official Trailer

Athiradi Tamil Official Trailer | Tovino Thomas | Basil Joseph | Arun Anirudhan | Vishnu…

8 hours ago