மாதவி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன ரஞ்சிதா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா இங்க பேய் பிசாசு எல்லாம் இருக்கும் என்று சொல்ல நந்தினி உள்ள போகலாம் என்று கூப்பிட, அமைதியா இரு நந்தினி என் மாமனார் சீர்வரிசை கொடுக்க வந்திருக்காரு என்று சொல்லி சோபாவில் உட்கார சொல்லுகிறார். பிறகு ரஞ்சிதா இந்த டிரஸ் உங்களுக்கு சூப்பரா இருக்கும் மாமா என்று அப்போ கரெக்டா தான் இருக்கும் என்று சொல்லுகிறான் உடனே சிங்காரம் நீங்க என் புள்ள உடம்பு சரி இல்லாத அப்போ பாத்துக்கிட்டதுக்கு நான் என்ன பண்ணாலும் உங்களுக்கு தீராது என்று சொல்ல நந்தினி என்னோட பொண்டாட்டி அவளுக்கு நான் என்ன செஞ்சாலும் தீராது அவளை நான் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன் என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி சென்று விடுகிறார். சூர்யா அவர்களை அழைத்துச் சென்று விட சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் வந்து முதல்ல அந்த கும்பலை இங்கிருந்து கிளம்பி போக சொல்லுங்க என்று கோபப்பட அப்படி எப்படி சொல்ல முடியும் என கேட்கிறார். அவங்க சீர்வரிசை கொடுக்க தான வந்திருக்காங்க கொடுத்துட்டு போக சொல்லுங்க என்று சொல்ல அது எப்படி கிளம்பச் சொல்ல முடியும் என சூர்யா கேட்கிறார்.

அவங்க வந்துட்டு போறதுக்கு வரல, இங்க வந்து தங்கி தீபாவளி கொண்டாடிட்டு சந்தோசமா சாப்பிட்டு இருந்துட்டு தான் போவாங்க அதையும் மீறி வேற யாராவது அவங்கள வெளிய அனுப்பனும்னு நினைச்சாங்கன்னா அவ்வளவுதான் அவங்களுக்கு பிடிக்கலைன்னா ஒன்னு ரூமுக்குள்ள போக சொல்லுங்க இல்ல ஹோட்டலுக்கு போக சொல்லுங்க என்று சொல்லிவிட்டு போக அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி நான் எதுக்காக போகணும் என்று கோபப்பட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க, அம்மாச்சி பேசிக்கொண்டு இருக்கிறார். உன் முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுது நந்தினி, முகத்தில் கவலை இல்லாம இருக்க என்று கேட்க கரெக்ட் தான் அம்மாச்சி இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் என சொல்லுகிறார். நீ தம்பி மேல இருக்குற கோவத்தை எல்லாம் மறந்துட்டியா என்று சொல்ல, ஆமா எல்லாமே மறந்துட்டேன் எனக்கு அம்மா போட்டதுக்கு அப்புறம் தான் அவரோட மனசு புரிஞ்சது. முதல்ல அவரோட சுயநலத்துக்காக தாலி கட்டினார் என்று நினைப்பேன் ஆனா இப்போ அவர் நல்லா பாத்துக்கணும்னு எனக்கு தோணுது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

இதோட மட்டும் விட்ற கூடாது நந்தினி. நீங்க ரெண்டு பேரா இல்லாம குடும்பமா மாறனும் உன் வயித்துல ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று சொல்ல நந்தினி வெட்கப்படுகிறார் பிறகு மாதவி இதுவரையா அதுவரைக்கும் உன்னை இந்த வீட்டில் விட்டா தானே என்று நினைத்து விட்டு சென்று விடுகிறார். அதெல்லாம் சூர்யா சாருக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல அது எப்படி விருப்பம் இல்லாம போகும் அடி மேல் அடி வைச்சா அம்மியும் நகரும் எல்லாம் கண்டிப்பா நடக்கும் என சொல்லிவிட்டு அம்மாச்சி சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா காரில் செல்லும்போது வழக்கம் போல தாய்க்குலம் பிரச்சனை ஆரம்பிச்சிட்டாங்க கொஞ்சம் கூட இன்னும் திருந்தல நம்ம கண்டிப்பா நந்தினி குடும்பத்தை விட்டு போனா ஏதாவது பிரச்சினை பண்ணுவாங்க நம்ம அப்படி பண்ண விடக்கூடாது என்று நினைக்க நந்தினி போன் போடுகிறார்.

என்ன விஷயம் நந்தினி என்று கேட்க அப்பாவும் அம்மாச்சியும் சீர் கொடுக்கதாக பார்த்துக்கிட்டு இருக்காங்க நீங்க வந்தீங்கன்னா கொடுத்துட்டு கிளம்பிடுவாங்க என்று சொல்ல, எதுக்கு ஊருக்கு போகணும் நீ தான் ஊருக்கு போக சொன்னியா என்று கேட்க நாலாம் சொல்லல சார் என்று சொல்ல சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் அவங்கள வெயிட் பண்ண சொல்லு என சொல்லுகிறார். பிறகு புனிதா கிச்சனுக்கு வர கல்யாணம் கூப்பிட்டு பேசுகிறார் டீ காபி ஏதாவது குடுக்கிறியாமா என்று கேட்க நானே போட்டுக்கிறேன் என சொல்ல சிங்காரம் எல்லா பொருளையும் எடுத்து காட்டிவிட்டு நான் கொஞ்சம் கடை தெருவுக்கு போயிட்டு வரமா நீ போட்டுக்கோ என சொல்லுகிறார். புனிதாவும் டீ போட சுந்தரவல்லி கவனித்து கடுப்பாகி அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா என்று கூப்பிடுகிறார்.

உனக்கு அங்க என்னடி வேலை என்று கேட்க டீ போட்டுக்கிட்டு இருந்தேன் என சொல்லுகிறார். முதல்ல உன்னை யாரு கிச்சனுக்கு போக சொன்னது அங்க இருக்கிறவோட பொருளோட விலை என்னன்னே உனக்கு தெரியுமா வந்தோமா சீர் கொடுத்தோமா போன மாதிரி இல்லாம இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க என்ன வேணா பேசுற வாய் திறந்து பேசு என்ற திட்ட உடனே குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். நந்தினிவிடம் அவளை கிச்சனுக்கு அனுப்புனதே நீதானே என்று சொல்லுகிறார். என்ன சிங்காரம் நீங்கெல்லாம் யாரு என்று கேட்க வேலைக்காரங்க என்று சொல்ல, நீங்க மொத்த குடும்பமும் வேலைக்காரங்க தான் இதோ நீ பெற்றிருக்கியே இதுவும் சேர்ந்து இந்த குடும்பமே நீங்க இந்த வீட்டோட வேலைக்காரங்க தான் அப்படி இருக்கும்போது இவ எப்படி கிச்சனுக்கு போனா என்று சொன்னால் சிங்காரம் தெரியாம தப்பு பண்ணிட்டா மன்னிச்சிடுங்க அம்மா என்று சொல்ல உடனே சுந்தரவல்லி சுத்தி விட்டு சென்றுவிடலாம் நந்தினி சரி வாங்க எல்லாரும் மேல போகலாம் மேல அழைத்து வந்து ரூமுக்குள் புனிதாவிடம் நந்தினி எதுக்கு போன உனக்காக நான் போட்டு கொடுத்திருக்க மாட்டேனா நீயா எதுக்கு போன என்று கேட்கிறார்.இந்த வீட்ல தான் ஒன்னுனா பெரிய பிரச்சனை ஆகிடுவாங்கன்னு எனக்கு தெரியும் இல்ல என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி குடும்பத்துடன் வெளியில் வர சூர்யா எதிரில் வருகிறார். உங்களை யாரு என்ன சொன்னது என்று கேட்க, ரஞ்சிதா உங்க அம்மா தான் எங்கள சண்டை போட்டு வெளியே அனுப்பிட்டாங்க என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் இனிமேல் ஜென்மத்துக்கும் அவ குடும்பத்தை எங்க கூட்டிட்டு வரக்கூடாது நான் அவளுக்கு தோணி இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே சூர்யா நந்தினி இடம் எல்லாரும் பூஜை ரூமுக்கு வாங்க என்று கூப்பிட நீங்கதான் இப்படி சொல்றீங்க ஆனா நடக்கிறது எல்லாமே வேற மாதிரி இருக்கு சார் என்று நந்தினி சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 28-10-25
jothika lakshu

Recent Posts

Hellallallo Video

Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…

9 hours ago

Tomato Thakkali Promo Video

Tomato Thakkali Promo Video | Parimala and Co | Jayaram | Urvasi |Sandy |Sanjana |…

9 hours ago

Roohe Roohe Lyric Video

Roohe Roohe Lyric Video | Habeebi | Shweta Mohan,Kapil Kapilan,Rizwan Shah | Sam CS |…

9 hours ago

Ego Raman Official Trailer

Ego Raman Official Trailer | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…

9 hours ago

IYALISAIYE Lyrical Video

IYALISAIYE Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath |…

9 hours ago

Athiradi Tamil Official Trailer

Athiradi Tamil Official Trailer | Tovino Thomas | Basil Joseph | Arun Anirudhan | Vishnu…

9 hours ago