அண்ணாமலை சொன்ன வார்த்தை, முத்துவின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல வர சம்பளத்துல சாப்டா அது விஷம் ஆயிடும் இந்த வேலை உனக்கு வேணா சத்தியா மனசு நிம்மதி இருக்கிற வேலையை நீ பார்த்துக்கோ என்னால முடிஞ்சது நான் சொல்லிட்டேன் இதுக்கப்புறம் உன்னுடைய இஷ்டம் என்று சொல்ல சத்தியா கிளம்பி விடுகிறார். மறுபக்கம் ஸ்ருதி நீத்து ரெஸ்டாரண்டுக்கு வந்து 12 ஃபிரைட் ரைஸ் வேண்டும் என சொல்லுகிறார். நீங்களே ரெஸ்டாரன்ட் வச்சிருக்கீங்க அப்புறம் எதுக்கு என்னோட ரெஸ்டாரன்ட் வந்து சாப்பாடு கேக்குறீங்க சமைக்கறதுக்கு ஆள் இல்லையா என்று நீத்து கேட்க, அப்படிலாம் இல்ல நிறையவே ஆள் இருக்காங்க ஒரு மினி காலேஜ் மாதிரி என்னோட ரெஸ்டாரன்ட் ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு நீங்களும் வந்து பாத்தீங்கன்னா கொஞ்சம் கத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ரவி வர அவரிடம் எனக்கு 12 ஃபிரைட் ரைஸ் ஆர்டர் கொடுக்கணும் என்று கேட்கிறார். நீத்து நம்மளுக்கு வந்த ஆர்டரை நீங்கள் எடுத்துக்கோங்க என்று சொல்ல ரவியும் ஆடர் எடுத்துவிட்டு வெளியில் பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி நேத்து விடும் சிலர் என்னோட ஹோட்டல்ல இருந்து ஆள விலைக்கு வாங்கி எனக்கு பிராப்ளம் கொடுக்கணும்னு நினைச்சாங்க ஆனா இது மாதிரி ஒரு எதிரி இருக்கும் போது தான் நல்லா முன்னேற என்ன பண்ணனும் என்று யோசிக்கத் தோணுது என்று சொல்ல ரவி இதை கவனித்து விடுகிறார். பிறகு சுருதி வெளியில் வந்து உட்கார்ந்து விட ரவி நீத்துவிடம் அவங்களே வந்ததா சொன்னிங்க நீங்க தான் உங்கள காசு கொடுத்து இந்த ஹோட்டலுக்கு வர சொன்னீங்களா என்று கேட்க நீர்த்து ஆமாம் என்று சொல்லுகிறார். நீங்க பண்ணது கொஞ்சம் கூட சரியில்ல நீ தூ இதுல கூட பாலிடிக்ஸ் மாதிரி இருக்கு என்று சொல்ல எல்லாத்துலயுமே பாலிடிக்ஸ் இருக்கிறது நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் சத்யா ஆபீசுக்கு வந்து ஓனர்யின் சார் திரும்பி உட்கார்ந்து கொண்டிருக்க முத்து சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொல்லி நான் இதுக்கப்புறம் இந்த வேலையில் இருக்க விரும்பல நான் கிளம்புறேன் என்று சொல்லுகிறார் பிறகு உடனே திரும்பி நான் உங்களை போக சொல்லலையே என ஒரு பெண் குரல் கேட்கிறது. பிறகு தான் அது ஓனரின் மகள் என தெரிய வருகிறது. அந்தப் பெண் சத்யாவை பாராட்டி பேசுகிறார் இந்த மாதிரி ஜென்யுமான ஒரு ஆள் நம்ம கம்பெனியில் இருக்கிறது ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னது கரெக்டு தான் என சொல்லிக்கொண்டு இருக்க அதற்குள் ஓனர் வருகிறார் அவர் சத்யாவிடம் நான்தான் என் பொண்ணு வெளிநாட்டில் படிச்சுக்கிட்டு இருக்கான்னு சொன்னேன்ல அது இவதான் என சொல்லுகிறார். பிறகு சத்யா சொன்ன விஷயங்களை ரேகா அவரது அப்பாவிடம் சொல்லுகிறார் எதுக்கு டாடி இவ்வளவு வட்டி நம்மளுக்கும் அந்த சாபம் வேண்டாம் என்று சொல்லுகிறார். உடனே ஓனரும் உங்க மாமா சொல்றதுதான் கரெக்டுப்பா என்று சொல்ல இதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு சார் எல்லாருமே பைனான்ஸ் கம்பெனி என்றால் ரொம்ப பயப்படுறாங்க ஆனா நம்மளோட நீங்களா எல்லாத்தையும் ப்ராப்பரா பண்ணி கம்மியான வட்டியில் கொடுக்கலாமா என்று சொல்ல ரேகா மற்றும் அவரது அப்பா இருவரும் சம்மதம் சொல்லுகின்றன இதுக்கப்புறம் நீங்க இங்க இருந்து போக வேண்டாம் என்று ரேகா சொல்லுகிறார் ரொம்ப சந்தோஷம் மேடம் ஒரு வேலை செய்ற பையன் சொல்றது ஓனர் கேட்கிறது ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து வேலை ஆட்கள் வந்து மேடம் ஓட அம்மா வந்து இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே வந்து வெளியில் சிந்தாமணியை கட்டிப்பிடிக்கிறார் பிறகு ரேகா சிந்தாமணியின் மகள் என தெரிய வருகிறது.

நீங்க ஏன் மம்மி வரல என்று கேட்க வேலையா இருந்தது என்று சொல்ல டாடியும் வரல நீயும் வரல நீ ஒரு நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறதுனால நான் எல்லாத்தையும் அக்செப்ட் பண்ண ஆரம்பிச்சு கிட்ட என்று சொல்லுகிறார். சிந்தாமணியிடம் ரேகா பேசுவது அவரது அப்பா பார்த்துக்கொண்டு இருக்கிறார். உன் கூட கொஞ்ச நாள் தங்கி இருக்கணும் போல இருக்குமா ஒரு வாரம் என் கூட இருக்கியா என்று கேட்க சரிங்கமா டாடி கிட்ட பேசிட்டு வரேன்னு சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி மனோஜிடம் என்ன சொன்னது வாங்கிட்டு வராம வந்திருக்க என்று கேட்க என்ன வாங்கிட்டு வர சொன்ன என்று கேட்க மெசேஜ் பாரு என்று சொல்லுகிறார் அதில் பீட்சா வேணும் என ரோகிணி கேட்டுள்ளார். உடனே மனோஜ் வாய்ஸ் நோட்டில் நான் வீட்டுக்கு வந்துட்டேன் ரோகிணி என்ன அனுப்ப நீ வெளியே இருந்தா அதனால அனுப்புன இப்ப உங்க எதிர்ல தான் இருக்கேன் என்று ரோகிணி கோபப்பட சரி நான் இப்ப போய் வாங்கிட்டு வரவா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் அண்ணாமலை முத்து வீட்டுக்கு வந்தவுடன் என்ன பேசுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? மீனா என்ன முடிவெடுக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Ennamo Sonneenga Perusa Lyrical Video

Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan

14 hours ago

Kaathaaga Vaazhaporen Lyrical Video

Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara

14 hours ago

Seppu Sela Video Song

Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…

14 hours ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நடிகை ஜியா சங்கருக்கு நிச்சயதார்த்தம்!

'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…

14 hours ago

இதனால் தான் ‘மக்கள் காவலன்’ கதையை தேர்வு செய்தேன் – நடிகர் மணிகண்டன்

'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…

14 hours ago

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…

15 hours ago