SiragadikkaAasai Serial Episode Update 19-04-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் காரை நிறுத்தி அருண் மெஷின் கொடுத்து ஊத சொல்லுகிறார்.ஆனால் நான் குடிக்கவில்லை என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க அது ஊதுனா தானே தெரியும் என்று சொல்லி பேசிக் கொண்டே இருக்க மற்றொரு போலீஸ் வந்து என்னப்பா பிரச்சனை என்று கேட்க நான் குடிக்கவே இல்ல ஆனா ஊத சொல்றாங்க ஊதுனா தான தெரியும் என்று போலீஸ் சொன்னவுடன் நீங்க கேட்டா நான் ஓதுற ஆனா அவரு சொன்னா நான் விடமாட்டேன் என்று சொல்லி அந்த போலீஸ் மெஷின் வாங்கி ஊத சொன்ன முத்து ஊதுகிறார் குடிக்காமல் இருப்பது தெரிந்தவுடன் சரி நீ போப்பா என்று சொல்ல இவ்வளவு நேரம் டைம் வேஸ்ட் தானே என்று சொல்லி வம்பு இழுக்க அந்த போலீஸ் அவரை அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் மீனா சந்திராவை சந்தித்து ஆர்டர் விஷயமும் பணம் தேவைப்படும் விஷயத்தையும் சொல்ல மாப்பிள்ளை வச்சிருக்காரா என்று கேட்க அவர் கைல இல்லமா என்று சொல்லுகிறார் அதுவே வீட்டில் கேட்க போகும் போது தான் அத்தை பிரச்சினை பண்ணிட்டாங்க என்று சொல்லுகிறார். சரி டி நான் பாக்குற ஏதாவது ரெடி பண்ண முடியுதா என்று பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சீதா வருகிறார். என்ன விஷயம் அக்கா என்ன ஆச்சு என்று கேட்க மீனா நடந்த விஷயங்களை சீதாவிடம் சொல்ல என்கிட்ட ஒரு லட்ச ரூபா சீட்டு போட்டு வச்சிருக்கேன் 40,000 சேவிங்ல இருக்கு நான் கொடுக்கிறேன் அக்கா என்று சொல்ல அதெல்லாம் வேணாம் சீதா நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் நீ எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்க அக்கா இதை கண்டிப்பா நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என்று சொல்லுகிறார்.
சீதா ஒரு லட்சத்தி 40 ஆயிரம் இருக்கு என்று சொல்ல மீனா பத்தாயிரம் கையில இருக்கு என்று சொல்லுகிறார் அப்போ இன்னும் ஒரு லட்சம் தானே நான் எப்படியாவது ஏற்பாடு பண்றேன் என்று சீதா சொல்லுகிறார். மறுபக்கம் முத்து பாரில் குடித்துக்கொண்டிருக்க செல்வம் வந்து கொஞ்ச நாளா விட்டுட்டு இருந்த இப்ப எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க முத்து என்று கேட்கிறார். அந்த போலீஸ்காரர் இருக்காரு இல்ல என்ன ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாரு அதனாலதான் என்று சொல்லுகிறார். இப்போ உன்னை எதுக்கு வர சொன்னா இப்ப நான் புல்லா குடிச்சிருக்கேன் திருப்பி அந்த இடத்துக்கு போகணும் ஆனா வண்டி நீதான் ஓட்டணும் என்று சொல்லுகிறார்.
எதுக்குடா தேவை இல்லாம வம்பு இழுக்கற என்று சொல்ல வம்பு இழுப்போம் நல்லா தானே இருக்கும் என்று சொல்லி அடாவடியாக முத்து குடிச்சு விட்டு செல்வத்தை கார் ஓட்டி செல்ல அருண் நிற்கும் இடத்திற்கு சென்று நிறுத்துகின்றனர் அங்கு சென்ற அருண் நிறுத்தி செல்வத்தை ஊத சொல்ல அவன் தான் குடிக்கலையே நான் தான் குடிச்சிருக்கேன் நான் ஊதுறேன் என்று அலப்பறை செய்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அருணை கடுப்பாக்கிய முத்து இன்னொரு போலீஸ் செல்வத்திடம் காரை எடுக்குமாறு மிரட்டுகிறார். பிறகு அவர்கள் சென்றவுடன் அருண் முத்துவை கோபமாக பார்க்கிறார்.
மறுபக்கம் மீனா பூ கட்டிக் கொண்டிருக்க அண்ணாமலை முத்து இன்னும் வரலை அம்மா என்று கேட்க ஏதாவது சவாரி போயிருப்பார் வந்துருவாரு மாமா என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டுக்கு வர மீனா குடித்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். மீனா என்ன கேள்வி கேட்கிறார். அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…
Bum Baa Diga Diga Music Video | DC | Lokesh | Sun Pictures | Anirudh…
Thedal Thodarudhey Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath…
Nee Sel Video | The India Story | Kajal Aggarwal Kitchlu,Shreyas Talpade | Mangesh D…
Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…
Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…