ரோகினி போட்ட பிளான், முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இன்றைய கொலுவிற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க ஒவ்வொருவராக வருகின்றனர். பார்வதி வர விஜயா அவரை வரவேற்று ஏன் இவ்வளவு லேட்டு என்று கேட்கிறார் அதற்கு தெரிந்தவர்கள் வச்சிருந்தாங்க அதனால அங்க போயிட்டு இங்கு வந்தேன் என்று சொல்லிவிட்டு மீனாவிடம் அங்கேயும் சுண்டல் கொழுக்கட்டை செஞ்சுருந்தாங்க ஆனால் மீனா செய்ற டேஸ்ட் இல்ல என்று சொல்ல எடுத்துட்டு வரவா ஆன்ட்டி என்று கேட்கிறார். இல்ல வேணாம் பூஜை முடிச்சுட்டு சாப்பிட்டுக்குறேன் என்று சொல்லுகிறார்.

பிறகு ஸ்ருதியின் அம்மா வர, விஜயா அவரை வரவேற்று கூப்பிட்டு வருகிறார். உடனே முத்துவை வம்பு இழுப்பம்படி ஸ்ருதியின் அம்மா பேச முத்துவும் பதிலடி கொடுக்கிறார். உடனே அண்ணாமலை வந்து கூட்டி செல்கிறார். வித்யா டான்ஸ் ஆடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வர ரோகிணி அவரை உள்ளே அழைத்து கூப்பிடுகிறார் உடனே வித்யா இன்னைக்காவது போன் எடுத்துடனும் என்று பிளான் போட அதுக்கு தானே இவ்ளோ பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே விஜயாவிடம் எடுத்துக் கொண்டு போய் காண்பித்து எப்படி இருக்கு என்று சொல்ல எதுக்குமா என்று கேட்கிறார் நான் தான் டான்ஸ் ஆட போறேன் சொன்னானே ஆன்ட்டி என்று ரோகினி சொல்ல அந்த நேரம் பார்த்து டான்ஸ் கிளாஸ் பசங்க வருகின்றனர். இவங்களுக்கும் டான்ஸ் ஆட தெரியும் அப்படியே ஆட வச்சுடு என்று சொல்லுகிறார் விஜயா.

மனோஜ் ரோகினி இடம் உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா எனக்கு தெரியவே தெரியாது என்று சொல்ல எனக்கு தெரியும் நிறைய தடவை ஆணவத்தில் ஆடி இருக்கு என்று முத்து சொல்ல அண்ணாமலை வாய வச்சிட்டு சும்மா இரு என்று சொன்ன பிறகு மனோஜ் அவன் அப்படித்தான் நீ விடு என்று சொல்லுகிறார்.

விஜயா கற்பூரம் ஏற்றி பூஜையை ஆரம்பிக்க, அனைவரும் சாமி கும்பிட்டு விட்ட கோலாட்டம் ஆட தொடங்குகின்றன. எல்லோரும் ஆடிக் கொண்டிருக்க சீதா மீனாவையும் ஆட சொல்லி கூப்பிடுகிறார். முதலில் மறுத்த மீனா பிறகு சீதாவும் மீனாவும் டான்ஸ் ஆட முத்து வீடியோ எடுக்கிறார். பிறகு முத்துவை ஆடச் சொன்ன சீதா வீடியோ எடுக்க மாறி மாறி ஆடிக்கொண்டு வீடியோ எடுக்கின்றனர் கடைசியாக போன் வித்யாவின் கையில் வர அவர் போன எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு வந்து விடுகிறார் பின்னாடியே வந்த ரோகினி போனை வாங்கி வீடியோவை தேடப் போக அந்த நேரம் பார்த்து வித்யா இது பண்ணியே ஆகணுமா முத்துவும் மீனாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க என்று சொல்ல அப்ப நான் எந்த பிரச்சினையில் சிக்கினாலும் பரவாயில்லையா என்று கேட்டு வீடியோவை எடுக்கிறார். அதற்குள் டான்ஸ் ஆட முடியாமல் வெளியே வந்த மீனாவை முத்து டான்ஸ் ஆட மறுபடியும் அழைக்கிறார் என்னால் முடியவில்லை டயர்டா இருக்கு என்று நான் வரவங்களுக்கு சாப்பாடு எடுத்து கொடுக்கிறேன் என்று வர முத்து இரு என்று இழுத்து நிற்க வைக்க மீனா அங்கிருந்து கிச்சனுக்கு ஓடி வருகிறார். பின்னாடியே முத்து ஓடி வர ரோகிணி மீது மோதி போன் கீழே விழுந்து உடைகிறது. இது என் போன் என்று முத்து கேட்க, டான்ஸ் வீடியோ பார்த்துக்கிட்டு இருந்த முத்து என்று சொல்லுகிறார் ரோகிணி.

போன் ஒடன்ஜிருக்கு நான் வேணா சரி பண்ணி தரேன் குடுங்க என்று சொல்ல வேண்டாம் நானே பண்ணிக்கிறேன் என்று முத்து போனை வாங்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.

அனைவரும் கோலாட்டம் ஆடிக் கொண்டிருக்க விஜயாவும் கலந்து கொள்கிறார். நான் சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஆடுங்க என்று அவர் ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுக்கிறார். அனைவரும் கிளம்பிய பிறகு மீனா முத்துவுக்கு பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க நான் என்ன இப்ப பாட்டா பாட போற எங்க அம்மாவுக்கு கொடுத்தாலும் பரவால்ல என்று சொல்ல, எதுக்கு அவங்க கிட்ட கொடுத்து என்னை கிண்டல் பண்றியான்னு சொல்லி நான் திட்டு வாங்கணுமா என்று கேட்கிறார். மீனாவிடம் இருக்கும் திறமையை குறித்து முத்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்தப் பார்லர் அம்மா வேற ஃபோனை உடைச்சிருச்சு குழந்தை மாதிரி பாத்துக்கிட்டு இருந்த ஒரு தடவை கூட ரிப்பேருக்கு கொடுத்தது கிடையாது என்று பேச பரவால்ல போனையே குழந்தை மாதிரி பாத்துக்கிட்டிங்கனா குழந்தை எப்படி பாத்துப்பீங்க என்று மீனா சொல்லுகிறார். மீனா நீங்க இன்னைக்கு என்ன ஆட்டம் ஆடுனீங்க என்று சொல்ல கோலாட்டம் என்று முத்து சொல்ல அதற்கு மீனா அது கோலாட்டம் கிடையாது குத்தாட்டம் என்று கிண்டல் செய்கிறார். நாளைக்கு கடைசி நாள் அதுக்காக நாளைக்கு ஒரு கெஸ்ட் கூப்பிட போறோம் என்று முத்து சர்ப்ரைஸ் ஆக சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் மீனாவை கூட்டிக்கொண்டு க்ரிஷ் வீட்டிற்கு வருகிறார். எனக்கே தோணலைங்க என்று சொன்ன நம்ம வீட்ல ஒரு பங்க்ஷன் நடக்கும்போது இவங்க கலந்துக்கலனா எப்படி என்று கூப்பிட வருகின்றனர். க்ரிஷ் உன்னை எழுதிக் கொண்டிருக்க பாட்டி எங்க என்று கேட்கின்றனர். கடைக்கு போயிட்டு இருக்காங்க வருவாங்க என்று சொன்னவுடன் வெளியில் கால் இருப்பதை பார்த்து மட்டுமே வந்திருப்பதை யோசிக்கிறார் கிரிஷ் பாட்டி. உள்ளே வந்தவுடன் நலம் விசாரித்து விட்டு கொலு பங்க்ஷனுக்கு கூப்பிடுகின்றனர்.

பங்ஷனுக்கு முத்து கூப்பிட ரோகினி அம்மா என்ன சொல்லுகிறார்? அவர் வர சம்மதித்தாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

Ennamo Sonneenga Perusa Lyrical Video

Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan

1 hour ago

Kaathaaga Vaazhaporen Lyrical Video

Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara

2 hours ago

Seppu Sela Video Song

Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…

2 hours ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நடிகை ஜியா சங்கருக்கு நிச்சயதார்த்தம்!

'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…

2 hours ago

இதனால் தான் ‘மக்கள் காவலன்’ கதையை தேர்வு செய்தேன் – நடிகர் மணிகண்டன்

'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…

2 hours ago

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…

2 hours ago