Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாட்சி சொன்ன கறிக்கடைக்காரர் மணி.. ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 10-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது அப்போது ரோகினி பொய்தான் சொல்கிறார் என்பதற்கான சாட்சிக்காக வித்யாவை பேச கூப்பிடுகின்றனர் வித்யாவும் நானும் ரோகிணியும் நல்ல பிரண்டா தான் இருந்தோம் அவளுக்கு கல்யாணம் ஆனது கிருஷ் என்கிற ஒரு பையன் இருப்பதை எல்லாமே உண்மைதான். நான் இந்த உண்மையை முன்னாடியே சொல்லி இருக்கணும் ஆனா ஃப்ரெண்ட் என்ற காரணத்தினால் நான் சொல்லாம விட்டுட்டேன் என்று சொல்லுகிறார் உடனே ரோகிணி வித்யா சொல்றது எல்லாமே பொய் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். நான் வித்யாவின் கணவரான முருகரிடம் பேச வேண்டும் என்று ரோகினி சொல்லுகிறார்.

கோர்ட்டும் அவரது கோரிக்கையை நிறைவேற்ற முருகன் வந்து நிற்கிறார் உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு என்று கேட்க நாங்கள் லவ் பண்ணோம் என்று சொல்லுகிறார் யார் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது என்று கேட்க முத்து மீனாவும் என்று சொல்லுகிறார் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லுது அவங்களுக்காக நீங்க என்ன வேணா பண்ணுவீங்களா அவர்களுக்கு சாக சொன்னா சாவிங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் அப்ப பொய் சொன்னா சொல்லுவீங்க தானே என்று கேட்க பொய்யெல்லாம் அவங்க சொல்லித் தர மாட்டாங்க என்று சொல்லுகிறார் இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க முத்து மீனா இவங்கள பொய் சொல்றதுக்காக கூட்டிட்டு வந்திருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே கறிக்கடைக்காரர் மணியை அடுத்த சாட்சிக்கு கூப்பிடுகின்றனர்.

அப்போது அவர் ரோகினி செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல நீங்க காசு வாங்கிட்டு நடிச்சீங்களா என்று கேட்க இவங்க ரெண்டு பேரும் எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தரேன்னு சொன்னாங்க அதனாலதான் நான் நடிச்ச அதுக்கப்புறம் தான் இவங்க ஒரு குடும்பத்தை ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சது நான் வேண்டான்னு சொன்ன இருந்தாலும் அந்த பொண்ணு அழும்போது கஷ்டமா இருந்தது அதனாலதான் நான் நடிச்ச அதுக்கப்புறம் மாட்டிகிட்டேன் என்று சொல்லுகிறார். உடனே ரோகினி இவரு நடிக்க வச்சது உண்மைதான் அதுக்கு காரணம் என் மாமியார் தான் என விஜயா மீது திருப்பி விடுகிறார் அவங்க ஒரு கொடுமைக்காரங்க பணம் பணம்னு கேட்டு என்ன வரதட்சனை கொடுமை பண்ணுவாங்க அதனால தான் உங்க அப்பா மலேசியாவில் இருந்து வரலையா இப்போ வராங்கன்னு சொல்லு டார்ச்சர் பண்ணுவாங்க அதனால்தான் நான் இப்படி ஒரு ஆளை ரெடி பண்ணனும் என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம இவரு பணத்தை வாங்கிட்டு தான் என்கிட்ட நடிச்சாரு என்று சொல்லுகிறார் இப்பவும் பணத்தை வாங்கிட்டு வந்து தான் இப்படி பேசிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கின்றனர்.

அப்போது ரோகினி அவரோட பேன்க் டீடெயில்ஸ் பாருங்க என்று சொல்ல கறிக்கடைக்காரர் மணியின் போனை வாங்கிய ரோகிணி செக் பண்ணி மெசேஜை காட்டி பத்தாயிரம் கிரெடிட் ஆயிருக்கு பாருங்க என்று சொல்லி ஜட்ஜிடம் காட்டுகின்றன. உடனே கிருஷ்ணா ராம் என்ன மனோஜ் இதெல்லாம் என்று கோபப்படுகிறார். நான் எதுவுமே அனுப்பல என்று சொல்ல, பிறகும் மனோஜ் இதுக்காக தான் என் போனை வாங்கினியா என்று நினைக்கிறார். உடனே கறிக்கடைக்காரர் மணியின் வாக்குமூலமும் பணத்துக்காக பேசியதாக செய்து விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது? குடும்பத்தினர் என்ன செய்யப் போகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 10-02-25
siragadikkaaasai serial episode update 10-02-25