தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை சந்தித்த ரவி ஹோட்டலில் வேலை செய்கிறேன் ஆனால் நீத்து ஓட கால ஒடச்சதுக்கும் அவங்க ரெஸ்டாரன்ட் தீ வைத்து கொளுத்துனதுக்கு உங்க அப்பா கிட்ட இருந்து 9 லாக்ஸ் வாங்கி கொடுக்கணும் என்று சொல்லி கண்டிஷன் சொல்ல சுருதி அப்போ நான் அது மாதிரி சொன்னா நீத்து வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் பரவா இல்லையா என்று சொல்ல ரவி கோபப்பட்டு போக அந்த நேரம் பார்த்து மீனா சுருதியை தடுத்து நிறுத்தி இப்பதான் ரவி ஹோட்டலுக்கு வேலை செய்றேன்னு வந்திருக்காரு நீ அவசரப்படாத ஸ்ருதி என்று சொல்லு பிறகு ரவியிடம் வந்து பேசிய ஸ்ருதி சரி நீ போய் வேலை செய் நான் எங்க அப்பா கிட்ட இத பத்தி பேச ட்ரை பண்றேன் என சொல்ல ரவியும் சம்மதிக்கிறார். மறுபக்கம் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க சந்தோஷ் வருகிறார் ஏன் இவ்வளவு லேட் என்று கேட்க முக்கியமா உங்க விஷயத்துக்கு தான் போயிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.
என்ன விஷயம் என்று கேட்க அந்த கறிக்கடைக்காரர் மணிய சாட்சிக்கு சொல்ல முத்துவும் மீனாவும் ஏற்பாடு பண்ணவங்க அந்த விஷயமா பேசிட்டு வந்தோம் என்று சொல்ல அவர் ஒத்துக்கிட்டாரா என்று கேட்க அதெல்லாம் ஒத்துக்கொண்டார் வந்து சொல்லிடுவாரு என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து ரோகினி வர சந்தோஷ் பின்னாடி பாருங்க ப்ரோ என்று சொல்ல உடனே ரோகினி நிற்கிறார் மனோஜ் நான் பேசும் இதெல்லாம் கேட்டுடியா என்று சொல்ல ரோகிணி ஒன்றும் தெரியாதது போல் உன்னை பார்க்கும் போது என்ன பேசினாலும் என் காதில் விழாத மனோஜ் என்று சொல்லுகிறார் உடனே பிரகாஷுக்கு பத்தாயிரம் ரூபாய் காசு அனுப்பனும் அனுப்பிடு என்று சொல்ல நான் எதுக்கு அனுப்பனும் நீயே அனுப்பிவிடு என்று சொல்லுகிறார். ஒரே நம்பரிலிருந்து அனுப்புனா தான் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்ல என்கிட்ட அவன் நம்பர் எல்லாம் கிடையாது இந்தா நீ அனுப்பிடு என்று போனை கொடுக்கிறார். அப்போதுதான் கறிக்கடைக்காரர் மணியை வைத்து பேச வைப்பது ரோகினிக்கு தெரிய வரும் என்பதை மனதில் நினைத்து கறிக்கடைக்காரர் வச்சி திட்டம் போடுறீங்களா நாளைக்கு இது ஒரு செக் வைக்கிறேன் என்று மனோஜ் போனில் எதையோ செய்கிறார்.
மறுபக்கம் விஜயா அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்க முத்துமீனா வருகின்றனர் அப்போது கறிக்கடைக்காரர் மணியை பேச வைப்பது குறித்து சொல்ல மனோஜ் இதெல்லாம் பழைய நியூஸ் எனக்கே தெரிஞ்சிருச்சு என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம இந்த விஷயம் பேசும் போது ரோகிணி வேற அங்க வந்துட்டா என்று சொல்ல முத்து உடனே டென்ஷன் ஆகிறார் என்று கேட்க நான் கேட்டது தெரியவில்லை என்று தான் சொன்னா என்று சொல்ல அது எப்படி டா ஒத்துப்பாங்க கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சு நாளைக்கு வேற ஒரு திட்டத்தை போட போது என்று சொல்ல ரவி வருகிறார். பிறகு சுருதி ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த விஷயத்தை சொல்ல அப்போ ஸ்ருதி வீட்டுக்கு வந்துருவாளா என்று கேட்க வரமாட்டா என்று சொல்லுகிறார் இப்படி எடுத்துக்கிட்டே போனா என்ன ஆகிறது ஸ்ருதி கூட விட்டு கொடுத்துட்டு போகலாம் அல்ல என்று விஜயா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல அம்மா என்ன சொல்லிட்டு பிறகு சென்று விடுகிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் நாளைக்கு தான் செல்வத்துக்கு ஜாமின் கிடைக்கப்போகுது மனோஜோட டைவர்ஸ் கேஸும் வருது முதல்ல போலீஸ் ஸ்டேஷன்ல முடிச்சிட்டு கோர்ட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல மறுநாள் காலையில் முத்து மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர் அப்போது செல்வத்தின் மனைவியும் மகளும் கண்டிப்பா வந்துருவாரு என்று சொல்ல நாங்கள் பேசிட்டோம் கண்டிப்பாக வந்துருவாரு என்று சொல்லுகின்றனர் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து செல்வம் மனைவி மற்றும் அவளை கட்டிப்பிடித்து அழுகிறார் உடனே முத்துவையும் கட்டிப்பிடித்து அழுது ஆனா வேணும்னே பண்ணல டா என்று சொல்லுகிறார் என்னால உங்க குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை என்று சொல்ல யாருமே தெரிஞ்சு எதுவும் பண்ண மாட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே அருண் வந்து ஜாமின் கிடைத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன் ஆனால் உன்னோட லைசென்ஸ் கொடுக்க விடாமல் பண்றதுக்கு தான் எல்லா வேலையும் பண்ணிக்கிட்டு இருக்கேன் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்ல உடனே செல்வம் கதறி அழுது கொண்டு வெளியில் ஓடி வருகிறார். இதற்கு மேல் என் குடும்பம் என்னாக போகுதோ தெரியல என்று சொல்ல முத்து மீனா என்ன சொல்லுகின்றனர்?கோர்ட்டில் என்ன நடக்கிறது?என்பதை இன்றைய எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.


