siragadikkaaasai serial episode update 07-10-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா சந்திரா மூவரும் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வெளியில் வந்து சீதா பார்த்தவுடன் கடைகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர் உடனே சந்தோஷப்பட்டு சீதா அனைவரையும் கூப்பிட்டு காட்ட சந்திராவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே இதெல்லாம் எங்க கடை தானே என்று கேட்காமல் என்று சொல்லுகின்றார் உறங்க மருமகன் தான் கமிஷனர் கிட்ட பேசி கடையை வாங்கி இருப்பதாக சொல்ல உடனே சீதா அருண் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று சொல்லுகிறார் உடனே சந்தோஷப்பட்டு சந்திரா மாப்பிள கிட்ட பேசணும் என்று சொல்லி போன் போட்டு அருணுக்கு நன்றி சொல்ல மீனாவும் நன்றி சொல்லுகிறார்.
பிறகு மீனாவின் முகம் மாற என்ன என்று சந்திரா கேட்க என் வண்டி காணாமல் போய்விட்டது எப்படி கிடைக்கும்னு தெரியல என்று சொல்லி வருத்தப்படுகிறார். சரிமா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப மறுபக்கம் சிவன் பார்வதி வீட்டுக்கு வருகிறார் என்னை இவ்வளவு சீக்கிரமா கிளாசுக்கு வந்தீங்க என்று கேட்க உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம் என்று சொல்லுகிறார் நீங்க எதுக்கு என்கிட்ட பேசணும் என்று பார்வதி கேட்க நீங்க மோட்டிவேஷனல இருக்கீங்க என்று சொல்ல நான் யார்கிட்டயும் மோட்டிவேஷனலா பேசினதில்லையே என்று பார்வதி சொல்லுகிறார். இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க விஜயா வந்து விடுகிறார் நீங்க என்ன இவ்ளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க என்று கேட்க ஆட்டோ சீக்கிரம் வந்துடுச்சு என்று சொல்லுகிறார் உடனே சரி நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு பார்வதி இடம் நீ எதுவும் பேசவில்லை என்று கேட்க பார்வதி இல்லை என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சிந்தாமணி வந்து இறங்க அவர் உள்ளே சென்ற பிறகு முத்து வந்து டிரைவரின் விரட்டி காரை எடுத்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் கிரிசை மகேஸ்வரி ஸ்கூல் இருந்து அழைத்து வர வழியில் மீனா பார்த்து பேசுகிறார் ஆனால் காரில் ரோகிணி இருப்பதால் கிரிஷ் மீனாவிடம் பேசிவிட்டு கிளம்ப மீனா கிருசை காரில் விட வருகிறார் உடனே காரிலிருந்து இறங்கி மறைந்து கொள்ள மீனா பேசிவிட்டு கிரிஷ் அம்மா வந்தா எனக்கு சொல்லுங்க நான் உங்ககிட்ட பேசணும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு சிந்தாமணி கிளாஸ் முடித்துவிட்டு வெளியில் வந்து பார்க்க கார் இல்லாமல் இருக்கிறது உடனே முத்து வேகமாக வந்து சிந்தாமணி எதிரில் காரை நிறுத்துகிறார். என்ன காரத் தேடிட்டு இருக்கீங்களா என்று கேட்க என் கார் எதுக்கு தூக்கின என்று கேட்கிறார் ஆமா நான் தான் காரை எடுத்து இருக்கேன் நம்ப மாட்டீங்களா என்று போனை எடுத்துக்காட்டுகிறார் நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க என் மாமியாரோட பூக்கடையை தூக்கினது நீங்கதான் எனக்கு தெரியும் அது அவன் வாயாலே ஒத்துக்கிட்டான் அதே மாதிரி மீனாவோட வண்டியையும் நீங்கதான் தூக்கி இருக்கீங்கனு தெரியும் ஒழுங்கா கொடுத்துடுங்க என்று சொல்லுகிறார்.
சிந்தாமணி யோசிக்க முத்து அந்த கார கொடுத்திடுங்க என்று போனில் சொல்ல சிந்தாமணியும் நான்தான் எடுத்திருக்கேன். என்ற உண்மையை சொல்லிவிட்டு முதல்ல என்னோட காரை வர சொல்ல அப்பதான் வண்டி எங்க இருக்குன்னு சொல்லுவேன் என சொல்ல முத்து காரை எடுத்து வர சொல்லுகிறார் பிறகு காரை பார்த்தவுடன் சிந்தாமணி ஒரு காட் கொடுத்து இங்க தான் உன்னோட வண்டி இருக்க போய் எடுத்துக்கோ என்று சொல்ல முத்துவும் அதே இடத்தில் தேடிப் போகிறார். முத்து போன இடத்தில் வண்டி கிடைத்ததா?இல்லையா? என்ன நடக்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…