கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்டிருந்த அவர், கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்ததால் மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

பிரதீப் ராவத்துக்கு மனைவி கல்யாணி மற்றும் மகன் விக்ரமாதித்யா உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறுகின்றன.

பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் இந்தியில் ‘லகான்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்றார்.

தமிழ் ரசிகர்களிடையே, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிப்பின் மூலம் தனி இடத்தைப் பிடித்தார். அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கிலும் அதே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ‘தொட்டி ஜெயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

42 minutes ago

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

22 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

22 hours ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

23 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

23 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

24 hours ago