siragadikkaaasai serial episode update 03-10-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு பிரியாணி வாங்கி சென்று சிந்தாமணியை வரவைத்து மூவருக்கும் தட்டில் போடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா பூக்கடையை தூக்கிட்டாங்க என்று சொல்ல பார்வதி அதிர்ச்சி அடைகிறார் இப்ப நீ அதுக்காக தான் பிரியாணி வாங்கிட்டு வந்தியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் விஜயா பார்வதி இடம் கொடுக்க எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார் ஒருத்தவங்க கஷ்டத்துல இருக்கும்போது அதை கொண்டாடுவதற்கு பிரியாணி சாப்பிடக்கூடாது என்று சொல்லுகிறார் அது என்னால சாப்பிடவும் முடியாது என சொல்ல விஜயாவும் சாப்பிட ஆரம்பிக்கிறார் நீங்களாவது சாப்பிடுவீங்களா சிந்தாமணி என்று சொல்ல நீங்க சந்தோஷமா இருக்கும்போது நானும் உங்க சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறேன் என்று சொல்லுகிறார். முதல்ல அந்த கடைய தூக்குனாங்கன்னு கேள்விப்பட்ட உடனே நீங்க தான் செஞ்சுருப்பீங்க என்று நினைத்தேன் என்று சொல்ல சிந்தாமணி நான் எதுவும் பண்ணல என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம நீங்க அவங்க வியாபாரத்தை கெடுக்கணும்னா அவ வண்டிய தானே தூக்கணும் என்று ஐடியா கொடுத்து விட சிந்தாமணிக்கு நல்ல ஐடியாவாக தோணுகிறது உடனே கிச்சனுக்கு கை கழுவ வருகிறார்.
அந்த நேரம் பார்த்து அவர்களின் ஆட்களுக்கு ஃபோன் போட்டு மீனாவோட வண்டியை தூக்கிடுங்க என்று சொல்லிவிட்டு உடனே ரோகிணிக்கு போன் போட்டு நீ சொன்ன விஷயத்தை பண்ணியாச்சு என்று சொல்லிவிட்டு மீனாவோட வண்டியை தூக்க போகும் விஷயத்தை சொல்லுகிறார். ரொம்ப நல்லது என்று ரோகினி சொல்ல அப்புறம் அந்த டெக்கரேஷன் விஷயம் உங்களுக்கு தான் என்று சொல்லுகிறார் சரி இதுக்கு அப்புறம் எந்த உதவி வேணாலும் என்கிட்ட கேளு செய்கிறேன் என்று சிந்தாமணி சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் மீனாவின் அம்மா சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்க சத்தியா சாப்பாடு கொடுத்து விட்டு சாப்பிட சொல்லுகிறார் ஆனாலும் கடையை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனா வருகிறார் சமாதானப்படுத்திய அவருக்கு சாப்பாடு ஊட்டி விட கொஞ்ச நேரத்தில் சீதா வந்து போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் அருண் விசாரிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு கண்டிப்பா நமக்கு அடைய மீட்டு விடலாம் என்று சொல்லுகிறார் அவர் விசாரிச்சிட்டு தான் இருக்கார் நம்ம எப்படி ஆவது நம்ம கடையை திருப்பி விடலாம் என்று சொல்லுகிறார். நான் வேணும்னா நான் கோவில் மேனேஜர் கிட்ட பேசி பார்க்கிறேன் என்று சொல்ல வந்தால் நேர்மையானவன் இல்லையா? கடையில எல்லாம் காசு வாங்கிட்டு இருக்காங்க என்று சத்யா சொல்லுகிறார்.
சரி நான் இந்த விஷயத்தை மாமா கிட்ட சொல்றேன்னு சொல்லுகிறார் மறுபக்கம் கார் செட்டில் முத்து உட்கார்ந்து கொண்டிருக்க செல்வம் வர என்னடா விசாரிச்சியா என்று கேட்க அந்த கார்ப்பரேஷன் ஆபிசர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் யார்கிட்டயும் லஞ்சம் வாங்க மாட்டாரா என்று சொல்ல அப்ப காசு கொடுத்து எதுவும் பண்ண முடியாது வேற வழியில் தான் பண்ணனும் என பேசிக்கொண்டு இருக்க மீனா வருகிறார் என்ன ஆச்சு மீனா அத்தை எப்படி இருக்காங்க என்று சொல்ல அவங்க ரொம்ப வருத்தப்பட்டு இருக்காங்க கரும்பு மெஷின் போனதுதான் உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல அவங்க மாமாவுடன் ஞாபகமா வச்சிருக்காங்க அப்புறம் எப்படி கவலை இல்லாம இருக்கும் என்று சொல்லுகிறார் என்னங்க ஏதாவது விசாரிச்சு இருக்கீங்களா என்று சொல்லிவிட்டேன் சீதாவும் அருண் கிட்ட சொன்னதுனால அவரும் போலீஸ் மூலியமாக விசாரிக்கிறேன்னு சொல்லி இருக்காரு என்று சொல்லுங்க அப்ப நான் எதுவும் விசாரிக்க வேணா வாங்கிட்டு கேக்குறேன் அப்படி சொல்லல நீங்களும் ஏதாவது பண்ணனும் என்று சொல்ல மீனா கோவிலில் புதுசா வந்திருக்கும் மேனேஜர் சரி இல்லையா வெளியில வைக்கிற கடையில எல்லாம் காசு வாங்கறாராம் டிபன் வாங்கி கொடுக்க சொல்றாரோ என்று சொல்ல முதல்ல நம்ம வேலையை அவர்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும் என்று செல்வது மற்றும் மீனாவிடம் ஒரு திட்டத்தை சொல்லுகிறார்.
மறுபக்கம் ஷோரூம் இன் மனோஜ் ரோகினி இடம் அந்த ஆர்டரை யார்கிட்ட கொடுக்கிறது என்று கேட்க நான் ஆன்ட்டியோட பிரிண்ட் சிந்தாமணி இருக்காங்களா அவங்ககிட்ட கொடுக்கிறேன் என்று சொல்ல அவங்களும் நல்லதா பண்ணுவாங்க என்று பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார் என்ன விஷயம் சுருதி என்று கேட்க நான் தான் ஏற்கனவே சொன்னேனே ரெஸ்டாரன்ட் பிரிட்ஜ் அவன் எல்லாம் தேவைப்படுது என்று அதனால்தான் என்று சொல்ல உடனே ரோகினி மற்றும் மனோஜ் முகம் மாறுகிறது. நீங்க டீலர் கிட்ட இருந்து வாங்குற காசுக்கே எனக்கு கொடுங்க என்று சொல்ல ஒரு பொருள் ரெண்டு பொருள்னா பரவால்ல எல்லாத்தையும் கேட்கும் போது எப்படி கொடுக்க முடியும் என்று மனோஜ் சொல்ல நீங்க ஹோட்டலுக்கு வந்தா நான் கம்மி பண்ணி தரேன் அவ்வளவு தானே குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு தானே கொடுக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு நான் எந்தெந்த கம்பெனி நல்லா இருக்குன்னு போய் பார்க்கிறேன் நீங்க வாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு மனோஜ் ரோகினி வேற வழி இல்ல மனோஜ் வா என்று அழைத்துச் செல்கிறார் பிறகு ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? ரோகிணி இடம் ஸ்ருதி அம்மா போன் போட்டு என்ன பேசுகிறார்?அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…