siragadikka asai serial episode update 31-01-26
முத்து மீது பழிவிழ ரவி கோபப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீத்துவின் ஹோட்டலில் இரண்டு பேர் யாரோ கேசை திருப்பிவிட்டு ஃபயர் செய்து விடுகின்றனர் இது மட்டும் இல்லாமல் நீத்து தூங்கிக் கொண்டிருக்க அவரது காலை அடித்து உடைத்து விடுகின்றனர். மறுநாள் காலையில் அண்ணாமலை இடம் மீனா காபி போடுவோம் மாமா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் முத்து எங்க போயிருக்கான் என்று கேட்க அவரை நைட்டு சவாரிக்கு போயிருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்து வந்து விடுகிறார். அண்ணாமலை அவரிடம் எதுக்குடா நைட்டுகெல்லாம் போற பகல்ல ஓட்றதோடு நிறுத்திக்க வேண்டியது தானே என்று சொல்ல அதற்கு முத்து அவர்கள் டெய்லி கஸ்டமர் ஒரு அவசரத்துக்காக கூப்பிட்டாங்க எப்படி தட்ட முடியும் என்று சொல்லுகிறார் உடனே விஜயா இவ என்ன மனோஜ் மாதிரி தொழில் அதிபரா பகல்ல வேலை செஞ்சுட்டு நைட்ல வீட்ல இருக்குறதுக்கு இவங்க செய்ற வேலைக்கு இப்படித்தான் போக முடியும் என்று இளக்காரமாக பேசுகிறார்.
உடனே அண்ணாமலை அவனை குறை சொல்லாமல் உன்னால இருக்கவே முடியாதா என்று சொன்ன உங்கள மாதிரியே தான் நீங்க ட்ரைன் ஓட்டுனீங்க அவன் கார் ஓட்டும் என்று சொல்ல அதற்கு முத்து அவரது ட்ரெயின் ஒட்டி தான் இந்த குடும்பத்தை முன்னேற்றிருக்கிறார் அவ இன்னிக்கு பிசினஸ் பண்றானா அது அப்பாவால தான் என்று சொல்லுகிறார் ரவி எங்கே என கேட்க சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரவி கோபமாக வந்து முத்துவின் சட்டையை பிடித்து ஏன்டா இப்படி பண்ணேன் என்று கோபமாக கேட்கிறார்.
என்னாச்சுடா என்று கேட்க ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதடா எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு என்னை இப்படி ஒரு பிரச்சனை மட்டிவிட்டு இருக்க என்று கோபப்பட்டு பேசிக் கொண்டே இருக்க குடும்பத்தினர் விளக்கி விட்டு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். அப்போதுதான் ரவி நீத்துவை சந்தித்து நீத்துவின் ஹோட்டல் எரித்த விஷயத்தையும் நீத்துவின் கால் உடைத்தது முத்து தான் என்று சொன்னதாகவும் ஆனால் ரவி நம்ப மறுக்காமல் இருந்ததால் முத்து நேரில் வந்து என்னை மிரட்டியதாகவும் நேத்து சொன்னவுடன் ரவி வேறு வழியில்லாமல் நம்பியிருக்கிறார். உடனே போலீஸ் வந்து கம்ப்ளைன்ட் கேட்க நீத்து ரவியின் அண்ணன் என்பதால் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை என்று சொல்லுகிறார்.ஆனால் முத்து நான் எதுவுமே செய்யல என்று சொல்ல பொய் சொல்லாதடா நீ தான் எல்லாமே பண்ணி இருப்ப என்று கோபப்படுகிறார்.
அண்ணாமலை முத்து அப்படி பண்ணியிருக்க மாட்டா என்று சொல்ல விஜயா நீ அப்படி பண்ணது தான்டா கரெக்ட் என்று பாராட்ட நான் நல்லது பண்ணவே நீங்க பாராட்டிருக்க மாட்டீங்க ஆனா நான் எதுமே பண்ணனு சொல்ற நீங்க முந்திக்கிட்டு வந்து பாராட்டுறீங்கம்மா என்று சொல்லுகிறார். உடனே நீத்து போன் பண்ணி ஆபரேஷன் பண்ண போறதா சொல்றாங்க வந்து சைன் பண்றீங்களா என்று ஹாஸ்பிடல் கூப்பிடுகிறார். உடனே ரவியும் சென்றுவிட முத்துவும் மீனாவும் என்ன பேசுகின்றன?ரோகினி என்ன செய்கிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…