அண்ணாமலை கொடுத்த ஷாக்,மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஏசியை திருப்பி கொடுத்த சுதாவுக்கு ரோகிணி பணத்தை திருப்பி தர சுதா இதுக்கெல்லாம் காரணம் முத்து தான். அவர் மட்டும் ஏசியை திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது இல்ல, சரி நீங்க மட்டும் என்ன பண்ண முடியும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு மனோஜ் அவங்க தான் பணம் வேண்டாம்னு சொன்னாங்கலே அப்ப எதுக்கு கொடுத்த என்று கேட்க அவங்க சொன்னா அப்படியே விட்டுவிட முடியுமா அப்புறம் நமக்கு மரியாதை இருக்காது. ஸ்ருதி என்னை எப்படி மதிப்பா? என்று சொல்ல மனோஜ் உனக்கு ஏது அவ்வளவு பணம் என்று கேட்க தாலியை அடகு வைத்து விட்டதாக மஞ்சள் கயிரை எடுத்துக்காட்ட மனோஜ் ஷாக் ஆகிறார். பிறகு எனக்காக எதுக்கு இவ்வளவு பண்ணு என்று கேட்க நான் உன்னோட ஒய்ப் உன்னை எங்கேயும் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகினி கடையில் நடந்த விஷயத்தை சொல்லி முத்துவை ரவுண்டு கட்டுகின்றனர். மனோஜ் வேணும்னு தான் இப்படி பண்ணி இருக்கான். என்ன அவமானப்படுத்தணும் என்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கா.. எனக்காக ரோகினி அவளுடைய தாலியை அடகு வச்சு பணத்தை கொடுத்து இருக்கா என்று சொல்ல விஜயா இந்த வீட்டு மருமக இப்படி மஞ்ச கயிறோட நிற்கிறாய் என்று கவலைப்பட மீனாவும் ரொம்ப நாளா மஞ்ச கயிறோடு தான் இருக்கா என்று முத்து பதிலடி கொடுக்க அவளும் ரோகிணியும் பொண்ணா என்று கோபப்படுகிறார்.

ஸ்ருதி எங்கம்மாவும் எனக்கு போன் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டாங்க. முத்து அப்படி பண்ணியிருக்கக்கூடாது எங்க கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல உங்ககிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று பேச மனோஜ் எனக்கு வர கோவத்துக்கு உன்னை என்று முத்துவுடன் கோபப்பட என்னடா பண்ணுவ பண்ணு முத்து சரிசமமாக சத்தம் போட அண்ணாமலை நிறுத்துங்கடா நான் இங்க ஒருத்தன் இருக்கேன் நான் என்ன சிலையா என்று கோபப்படுகிறார். முத்து நீ பண்ணது தப்புதான். கூட்டுக் குடும்பமா இருக்கிற இடத்துல தன்னிச்சையா முடிவெடுக்க கூடாது. இனிமே இப்படி பண்ணாத என்று திட்டுகிறார்.

அதை பிறகு முத்து கிச்சனில் இருக்க மீனா நீங்க பண்ணது தப்புதான் என்று சொல்ல முத்து நான் என்ன தப்பு பண்ண நீயும் அப்படியே சொல்ற என்று கேட்க அவங்க என்ன திட்டம் போட்டு ஏத்தி அனுப்பினார்களோ அதை நீங்க நிறைவேற்றி வச்சிருக்கீங்க. இதுவே நீங்க மாமா கிட்ட சொல்லி இதை டீல் பண்ணிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்று சொல்ல முத்து நீயும் சரியா தான் யோசிக்கிற ஏதோ கோபத்துல பண்ணிட்டேன் என்று சொல்ல அந்த கோபம்தான் உங்களை யோசிக்க விடாமல் பண்ணுது என சொல்கிறார். நம்ம கால வாரி விட நிறைய பேர் காத்திருக்காங்க யோசிச்சு பண்ணுங்க என்று அறிவுரை சொல்கிறார்.

அடுத்து ஸ்ருதி ரவியிடம் முத்து பண்ணது தப்புதான் நீ இல்லன்னு சொல்ல போறியா என்று கோபப்பட முத்து பண்ணது தப்புதான் என்று ரவியும் சொல்ல சுருதி நீயா இப்படி சொல்ற என்று ஆச்சரியப்படுகிறார். அதே சமயம் உங்க அம்மா பண்ணதும் தப்புதான் உங்க அம்மா ஏசி அனுப்புறேன்னு உன்கிட்ட சொன்னாங்களா இல்ல வீட்ல இருக்க பெரியவங்க கிட்ட தான் சொன்னாங்களா யாரையும் கேட்காம அவங்க எப்படி அனுப்பலாம்? என்று சொல்ல சுருதி அவங்க சப்ரைஸா அனுப்பி இருப்பாங்க என்று சொல்கிறார். சர்ப்ரைஸ் அனுப்புனா உனக்கு மட்டும் அனுப்பனும் இந்த வீட்டுக்குள்ள எந்த பொருள் வரணும் வரக்கூடாது என்று முடிவு பண்ண வேண்டியது எங்க அப்பா தான் என்று சொல்ல சுருதி நீ சொல்றது சரிதான் எங்க அம்மா பண்ணது தப்புதான் நீ என்று ஒப்புக்கொள்கிறார். இதை எல்லாம் நீ ஏன் வெளியே சொல்லலை என்று கேட்க உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றதுக்காக தான் சொல்லல என்று சொன்னதும் சுருதிக்கு ரவி மீதான காதல் அதிகமாகிறது.

அடுத்ததாக விஜயா இந்த முத்துவும் மீனாவும் இந்த வீட்ல இருக்க வரைக்கும் பிரச்சனை தான் அவங்கள தனி கொடுக்கணும் வச்சிடலாம் என்று திரும்பவும் பேச்சை ஆரம்பிக்க அண்ணாமலை கோபப்படுகிறார். பிறகு இந்த வீட்டு மருமக ரோகிணி மஞ்சள் கயிற்றோட இருக்கா அவளுக்கு உடனே தாலி செயின் வாங்கணும் என்று சொல்ல அது அவ புருஷன் ஓட பிரச்சனை அவன் வாங்கி கொடுப்பான் என்று சொல்ல அதுவரைக்கும் இந்த வீட்டு மருமக இப்படியே இருப்பாளா? அது நமக்கு தானே அவமானம் என்று சொல்ல மீனா இவ்வளவு நாளா மஞ்சக்கயிறோட தான் இருக்கா அப்போ உன் கௌரவம் எங்க போச்சு என்று அண்ணாமலை கேள்வி கேட்டு மடக்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

14 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

14 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

15 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

23 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

2 days ago