என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் பயந்தாங்க என்று சிம்பு கண்கலங்கி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு ரெட் கார்டு விஷயம் குறித்து பேசி உள்ளார். அதாவது என் மேல ரெட் கார்டு போடுற சூழல் வந்தது அப்போது என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் பயந்தாங்க அப்போ என்னை அழைத்து எனக்கு செக்கச் சிவந்த வானம் படத்தை கொடுத்தவர் மணிரத்தினம் அதை நான் என்றும் மறக்க மாட்டேன் சார் ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.
இவரின் இந்தப் பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

simbu talk about director manirathnam