மாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் மாம்பழம் அதிகம் கிடைக்கும். இதனைப் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கியமான ஒன்று. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
மாம்பழம் தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் போது அது செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனையை உண்டுபடுத்துவது மட்டுமில்லாமல் உடல் எடையையும் அதிகரிக்க கூடும்.
இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். குறிப்பாக சரும பிரச்சனை மற்றும் ஒவ்வாமை பிரச்சனையும் ஏற்படும்.
எனவே மாம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.