தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு எப்பவும் மவுசு அதிகம் தான். எத்தனை சீரியல்கள் புதிதாக வந்தாலும் மக்கள் அவற்றுக்கு நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தொலைக்காட்சிகள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன.
அண்மையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்ததனால் படப்பிடிப்பு இல்லாத எடிட்டிங், டப்பிங் போன்ற இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 22 நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என அரசு கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…