தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
இந்தப் படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ஹேமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் அதாவது புது முகங்களுக்கும் டைரக்டர்கள் வாய்ப்பு தர வேண்டும் என்றும் அதேசமயம் தயாரிப்பாளர்கள் சீரியல் நடிகை தானே என்று எளிதாக கேட்டு விடக் கூடாது. சீரியல் நடிகை என்றாலே அதற்கான கதாபாத்திரங்கள் தான் ஒதுக்கிறார்கள் இதனால் தான் மனசோர்வு ஏற்பட்டு சினிமாவே வேண்டாம் சீரியலே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டேன் திறமையுள்ள நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் தயவுசெய்து டிவி நடிகர்களுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


