தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க அஜித் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வேகத்தில் இந்தப் படத்தில் இருந்து அஜித் விலகிக் கொண்டார். இதனையடுத்து சூர்யா விஜயுடன் இணைந்து நடித்தார்.
அஜித் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள என்ன காரணம் என்பது பற்றி பிரபல காமெடி நடிகர் தாமு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது இது குறித்த கேள்விக்கு இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொண்டார். அதன்பிறகு டேட்டா? ரேட்டா? எது பிரச்சனை என தெரியவில்லை. உண்மை எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசக்கூடாது என கூறியுள்ளார்.
அஜித் விலகிய பிறகுதான் அவருக்கு பதிலாக சரவணன் என்கிற சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார் என தெரிவித்துள்ளார்.


