நமது உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சத்தான கம்பு அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…
கம்பு அடை செய்வதற்கு முதலில் அரை கிலோ கம்பு, கடலை பருப்பு கால் கிலோ, துவரம் பருப்பு கால் கிலோ, எடுத்துக்கொண்டு 3 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் மிளகாய் பெருங்காயம் இஞ்சி உப்பு சேர்த்து அதனுடன் ஊற வைத்த பருப்பு மற்றும் கம்புவை சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கோஸை பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
கம்பு அடை செய்ய தோசை கல்லை எடுத்து சூடானதும் தோசையை ஊற்றி சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்கு வேக வைத்து இருபுறமும் சிவக்க விட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுட சுட சுவையான கம்பு அடயை ருசிக்க தயாராகிவிட்டது. இந்த கம்பு அடையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

