விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்
தெலுங்கு சினிமாவான ‘ரணபலி’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர். ‘டியர் காம்ரேட்’ படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. இப்படம் செப்டம்பர் 11-ந்தேதி திரைக்கு வருகிறது. திருமண வதந்திகள் பரவி வரும்நிலையில், இருவரும் படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்யவுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.


