கற்பழிப்பு வழக்கு.. 39 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய நடிகர்

கேரளாவை சேர்ந்த நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய்பாபு, அந்த நடிகையை பற்றி சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜய்பாபு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அதன்பின்பு அவர் நாடு திரும்பவில்லை. 39 நாட்களுக்கு பிறகு இன்று அவர் திரும்பினார் . கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தலைமறைவான விஜய்பாபு அதன்பின்பு கேரளா திரும்பவில்லை. அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர் கேரளா திரும்பி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும், அதுவரை விஜய்பாபுவை கைது செய்ய கூடாது எனவும் கூறியது.

இதையடுத்து நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் இருந்து 39 நாட்களுக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். நாளை அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார். இது பற்றி அவர் கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்து உள்ளனர். வழக்கு விசாரணையின் போது நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார்.

Suresh

Recent Posts

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

30 minutes ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

45 minutes ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

15 hours ago

ரோபோ ஷங்கர் குறித்து எமோஷனலாக பதிவை வெளியிட்ட இந்திரஜா.!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…

15 hours ago

கண் முழித்த நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

Right Movie Press Meet

[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]

18 hours ago