ஒரு காலத்தில் கொண்டாடிய ‘பம்பாய்’, இப்போது சர்ச்சைக்குரியதா? ராஜீவ் மேனன் விளக்கம்!

இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குநரான மணிரத்னத்திடம் ஒரு வாய்ப்புக்காக பலரும் காத்திருக்கும் நிலையில், அவரது வெற்றிப் படம் ஒன்றை மீண்டும் வெளியிட்டால் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெளிப்படையாக பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ திரைப்படம் மும்பை கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நிலவிய பதற்றமான சூழலில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ‘உயிரே உயிரே’, ‘கண்ணாளனே’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நடிகர் ராஜீவ் மேனன்.

சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் பேசிய ராஜீவ் மேனன், “பம்பாய் போன்ற ஒரு படம் இப்போது வெளியாகியிருந்தால் திரையரங்குகள் எரிந்திருக்கும். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. முன்பு இருந்த சாதாரண நிலை இப்போது இல்லை. மதம் ஒரு பெரிய சக்தியாகவும், பிரச்சினைகள் நிறைந்ததாகவும் மாறிவிட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார். இந்து இளைஞனும் முஸ்லிம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருந்ததே அப்போதைய சர்ச்சைகளுக்கு காரணம். தற்போதுள்ள சூழலில் இது மேலும் தீவிரமான எதிர்வினைகளை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ் மேனனின் இந்த கருத்து, நாட்டில் நிலவும் மதரீதியான பதற்றத்தையும், கருத்து சுதந்திரத்தின் மீதான அழுத்தத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு படைப்பு, காலமாற்றத்தால் சர்ச்சைக்குரியதாக மாறுவது வருத்தமளிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னத்தின் ‘பம்பாய்’ திரைப்படம் ஒரு கலைப் படைப்பாக மட்டுமல்லாமல், அன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

5 hours ago

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

5 hours ago

ரோபோ ஷங்கருக்காக கமல்ஹாசன் செய்யப்போகும் விஷயம்..வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…

6 hours ago

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…

6 hours ago

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…

7 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, எமோஷனலாக பேசும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago