Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அயோத்தி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ரஜினிகாந்த். வைரலாகும் தகவல்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22-ந் தேதி) நடைபெறுகிறது.

விழாவுக்கு முக்கிய திரைப்பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தி திரை உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரைப்பிரபலங்கள் பலருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் தனுஷ், பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோவில் திறப்புவிழா வரலாற்றில் மறக்க முடியாத நாள். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

Rajinikanth latest news update
Rajinikanth latest news update