சந்தியாவை பாராட்டும் அதிகாரிகள்.. சிவகாமி செய்த வேலை.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போலீஸ் அதிகாரிகள் சந்தியாவை இன்டர்வியூ செய்யும் போது பல கேள்விகளை கேட்க அதற்கெல்லாம் சாதுர்யமாக பதில் அளித்துள்ளார். கடைசியில் பெண் போலீஸ் உங்களை கோபப்படுத்த தான் அப்படி பேசினேன் ஆனால் நீங்க ரொம்ப பொறுமையா அழகா பதில் சொன்னீங்க என பாராட்டுகிறார்.

இந்த பக்கம் செந்தில் கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடை விற்பனைக்கு வருவதாக தகவல் கிடைக்க அர்ச்சனா அதை நாமே வாங்கி விடலாம் என சொல்ல செந்தில் ஆதிக்கு கல்யாணம் என நிறைய செலவு இருக்கு என சொல்கிறான். ஆனால் அர்ச்சனா அவன் கல்யாணத்துக்கு எல்லாம் எதுவும் செலவு பண்ண கூடாது அவன் பேங்க்ல வேலை பண்றான் அவங்க மாமனார் சைடு நல்ல பணக்கார குடும்பம் எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க நாம நமக்காக சேர்த்து வைக்கிறதை பார்க்கணும் என ஏற்றி விடுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக சந்தியாவும் சரவணனும் வீட்டுக்கு வர சிவகாமி உட்பட எல்லோரும் சென்னை பயணம் குறித்து விசாரிக்கின்றனர். பிறகு அர்ச்சனா கிளப்பி விட சிவகாமி வேலை இந்த ஊரில் மட்டும் தான் இருக்க வேண்டும் வேறு எந்த ஊருக்கும் போகக்கூடாது. அப்படி வேற ஊரில் வேலை கொடுத்தால் அந்த வேலையே தேவை இல்லை என சொல்லிவிடு என கூறுகிறார். பிறகு சரவணன் சிவகாமியிடம் எடுத்து பேச முயற்சி செய்து முடியாமல் போகிறது.

அடுத்ததாக வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அப்போது திடீரென ஜெசி வீட்டார் வருகின்றனர். வேலை விஷயம் குறித்து பேச ஜெசி தனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்ல சிவகாமி அப்பாடா நல்ல விஷயமா போச்சு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜெஸ்ஸியின் அப்பா ஏன் அப்படி சொல்றீங்க எனக்கு கேட்க ஆதி வேலைக்கு போகிறான். ஜெஸ்ஸியும் வேலைக்கு போயிட்டா குடும்பத்தை யாரு கவனிக்கிறது என சிவகாமி சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

49 minutes ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

1 hour ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

1 hour ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

1 hour ago

பைசன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

2 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்து மீது பழி சொல்லும் அருண் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

2 hours ago