Raja Rani 2 Serial Episode Update 04-07-22
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி போலி சாமியாரின் போட்டோவை வாங்கி வந்து வீட்டில் மாட்ட சந்தியா மனதுக்குள் இவர் ஒரு போலி சாமியார் என சொல்லிக் கொள்கிறார்.
அதன் பிறகு சிவகாமி கிச்சனில் இருக்க அவரிடம் சென்று சந்தியா பேச முயற்சி செய்ய அவர் வெளியே வந்து விட இதை பார்த்த அர்ச்சனா சந்தியாவை நக்கல் அடிக்கிறார். உடனே நீங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கறது சாதாரண கருத்து வேறுபாடு இது சரியாகிவிடும். ஆனா இத வச்சு குளிர்காய நினைச்ச நீ இதுவரைக்கும் செஞ்ச எல்லாத்தையும் நான் போட்டு உடைத்து விடுவேன் என சொல்லி அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சந்தியா.
அதன் பிறகு சந்தியா மயிலிடம் வந்து தன்னுடைய துணிகளை கேட்க அப்போது சிவகாமி இதையெல்லாம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ணு என கூறுகிறார். சந்தியா நானே பண்ணிக்கிறேன் என சொல்ல சிவகாமி மயிலிடம் சொன்னதை செய் என கூறுகிறார். பிறகு சாப்பிடும்போது சந்தியாவை உட்கார வைத்து நீ முதல்ல சாப்பிடு என பரிமாறுகிறார் சிவகாமி.
சரவணன் அப்பா கடைக்கு வந்து சரவணன் இடம் இனிமே பார்த்து நடந்துக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்குகிறார். பிறகு சந்தியா சிவகாமியிடம் சென்று நீங்கள் இப்படி பேசாமல் இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுது கெஞ்சுகிறார். உங்களுக்கு பிடிக்கலன்னா நான் படிக்கல என சந்தியா சொல்ல இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் இது வீடு இல்ல போர்க்களம். இந்த போட்டியில் நீ ஜெயிக்கிறியா இல்ல நான் ஜெயிக்கிறியானு பார்த்திடலாம் என சவால் விடுகிறார். இதனால் சரவணன் சந்தியா என இருவரும் அதிர்ச்சடைகின்றனர்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…