மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய இவர் நீங்க எல்லாம் இல்லாம நாங்க கிடையாது இந்த இடத்தில் நீங்க இல்லனா நாங்க பாட முடியுமா? பேச முடியுமா என்று கேட்ட அவர் அதன் பிறகு நம்ம வேடிக்கை மட்டும் தான் பாத்துட்டு இருக்கோம்னு நினைச்சீங்கன்னா லைஃப்ல ஒரு பாயிண்ட் வரும் அந்த பாய்ண்ட் வந்தா இந்த உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும் அந்த பாயிண்ட் வர வரைக்கும் ஜாலியா மத்தவங்களை வேடிக்கை பார்ப்போம் என்று கூறி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சைக் கேட்ட அனைவரும் அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் போட்டு ஆரவாரம் செய்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


