நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு – கைது செய்ய போலீசார் தீவிரம்

சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர், சமூக வலைத்தளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையிலான பதிவுகள் வெளியிடப்படுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், Instagram, YouTube உள்ளிட்ட தளங்களில் சிலர் இளம் வயதினரை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசி பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும், இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடர்ச்சியாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Suresh

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

9 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

9 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

10 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

10 hours ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

10 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

10 hours ago