அஜித் ஷாலினி திருமணம் தள்ளி போனதற்கு இந்த படம் காரணமா? இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தங்களது திருமணத்தில் ஏற்பட்ட தொடர் பிரச்சனைகள் குறித்து இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது அஜித்தும் ஷாலினியும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என ஷாலினி முடிவு செய்துவிட்டார். திருமணத்திற்கு முன்னதாக தான் நடிக்க வேண்டிய படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என முடிவு செய்திருந்தார்.

அப்படி இவர் கமிட் ஆகியிருந்த படங்களில் ஒன்றுதான் பிரியாத வரம் வேண்டும். இந்த படத்திற்காக மூன்று நாள் மட்டும் இவர் நடிக்க வேண்டிய ஷூட்டிங் பாக்கி இருந்தது. ஆனால் பிரசாந்த் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

இந்த ஷூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த காரணத்தினால் சாலினி மூன்று முறை திருமண தேதியை மாற்றி வைத்தார். ஆனாலும் ஷூட்டிங் முடிவடையாத காரணத்தினால் பொறுமை இழந்த ஷாலினி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து பின்னர் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் பிரியாத வரம் வேண்டும் படம் காரணமாக இவர்களின் திருமணம் தள்ளி தள்ளி சென்று ஏப்ரலில் தான் நடந்தது என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Perarasu About Ajith Marriage
jothika lakshu

Recent Posts

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

43 minutes ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

18 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

18 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

18 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

18 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago