திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு பராசக்தி பட குழுவினர் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது படக்குழு தணிக்கை குழுவால் கூறப்பட்ட அனைத்து மாற்றங்களையும் செயல்படுத்தி விட்டு மதியத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்பதில் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முழு அளவிலான முன்பதிவுகள் தொடங்கும் என்றும் இது கடைசி நேரம் முன்பதிவு அவசரமாக இருக்கும் ஆனால் தனி வெளியீடு என்பதால் நாளைய தொடக்கம் வலுவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தத் திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


