நடிகைகள் பலர் சினிமா வட்டாரத்தில் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே பெரிளவிலான வாய்ப்பையும், படங்களையும் பெறுகிறார்கள். சிலர் படங்களில் நடித்து வந்தாலும் திருமணம் போன்ற காரணங்களால் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிடுவதுண்டு.
தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவின் சகோதரர் மகளான நடிகை நிகாரிகா சினிமாவுக்கு பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இவருக்கும் JV Chaitanya என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் டிசம்பரில் அவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
நிகாரிகா நடிகர் அசோக் செல்வனுடன் தமிழில் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷை நடிக்க வைக்கிறார்களாம். படத்தை முடித்துக்கொடுத்துவிட வேண்டும் என்றிருந்தபோது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் போனதால் இப்படி ஒரு முடிவாம்.
தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நிகாரிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…