siragadikkaaasai serial episode update 17-02-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு உடம்பு முடியாமல் இருப்பதால் தூக்கத்தில் முத்து அவர்கள் மீனா ஆன்ட்டி என் எப்ப பாப்பா வருவீங்க என்று புலம்பிக்கொண்டே இருக்க உடனே ரோகினி அம்மா அவன் முத்துமீனாவ தான் தேடுறான் அவன் வந்து பார்த்தாங்கன்னா அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக வாய்ப்பு இருக்கு என்று சொல்ல உனக்கு எதுக்கு இந்த வேலை நீ போய் பாரு எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு ரோகிணி அமைதியாகி விடுகிறார் மறுபக்கம் வீட்டில் அண்ணாமலை உக்காந்து கொண்டு இருக்க மீனாவிடம் சொல்லி வீட்டில் இருப்பவர்களை வரச் சொல்லுகிறார் அப்போது அண்ணாமலை மனோஜிடம் இனிமேல் ரூம முத்து மீனாவும் பயன்படுத்திக்கிட்டோம் நீ வெளியில் படுத்துக்கொள் என்று சொல்லுகிறார்.
உடனே மனோஜ் நான் எதுக்கு வெளிய படுக்கணும் எனக்கு பிரைவசி வேண்டும் என்று சொல்லுகிறார். ஏன் ரூம் எல்லாம் தரமாட்டேன் என்று சொல்ல இதுக்கு முன்னாடி உன் பொண்டாட்டி கூட எதுவும் இல்லைதானே இருந்த இப்ப என்ன தனியா தானே இருக்க வெளியே ஹால்லையும் உனக்கு பிரைவசி இருக்கும் நீ வெளியில் படுத்துக்கோ என்று சொல்லுகிறார் உடனே விஜயா என் புள்ள படிச்சிருக்கா ஒரு பிசினஸ்மேன் அவன் எப்படி வெளிய படுக்க முடியும் என்று சொல்ல அப்போ உன் புள்ளையும் மருமகனும் இவ்வளவு நாள் வெளிய படுத்து கிட்டு இருக்காங்களே அப்போ உனக்கு எதுவும் தோணலையா என்று சொல்ல அது அவங்க தலையெழுத்து என்று விஜயா சொல்லுகிறார் உடனே கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்க ரவி நீங்க வேணா என்னோட ரூம் எடுத்துக்கோங்க என்று சொல்ல அண்ணாமலை வேண்டா ரவி ஸ்ருதி இப்போதைக்கு கோச்சிட்டு தான் போயிருக்கா அவ வந்துருவா என்று அண்ணாமலை சொல்லுகிறார்.
ஒரே முடிவாக நீ வெளியே தான் படுத்தாகணும் என்று சொல்லிவிட முத்து மீனாவும் மத்தவங்கள கஷ்டப்படுத்தி எங்களுக்கு அந்த இடம் வேண்டாம் என்று சொல்ல நல்லவங்களா இருக்கலாம் என்று கேட்கிறார் உங்க வார்த்தைக்கு எங்களால் மரியாதை கொடுக்காமல் இருக்க முடியாது என்று சொல்ல அப்போ நீங்க இனிமே அந்த ரூம்ல இருங்க இதுதான் என்னோட முடிவு என்று சொல்லிவிடுகிறார். முத்துவும் மீனாவும் வேறு வழி இல்லாமல் சம்மதித்து விடுகின்றனர் உடனே அனைவரும் சென்று விட முத்து மீனாவிடம் அவன் கட்டில் நம்மளுக்கு வேண்டாம் நம்ம கட்டில் எடுத்துன்னு போய் அங்க போட்டுக்கலாம் பெட் வாங்கிட்டு வந்துறேன் ஜாலி ஜாலி என்று மீனாவை பார்த்து சந்தோஷப்பட உடனே மனோஜ் பார்த்து முறைக்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதி ஹோட்டலில் ரோகினி வந்து பேசிக் கொண்டிருக்க மீனா வருகிறார் இவை எதுக்கு இப்ப இங்க வந்திருக்கா என்று சொல்லி இடம் கேட்க நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு தான் இருந்தேன் ஆனா நீங்க போன் எடுக்க மாட்டீங்க அதனால தான் சுருதிகிட்ட சொல்லி சொல்ல நானும் வந்தேன் என்று சொல்லுகிறார் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று சொல்லிவிட்டு உனக்கு உதவி பண்ணாதே மத்தவங்க முன்னாடி அசிங்கப்படுத்திவிட்டு தான் போவேன்னு நிறைய தடவை காட்டிட்ட இதுக்கு மேல உனக்கு உதவி எல்லாம் பண்ண முடியாது என்று மீனா உறுதியாக சொல்லிவிட கிருஷ்க்கு ரொம்ப உடம்பு சரியில்ல அவ உங்க பெயரை சொல்லிக்கிட்டு இருக்கா நீங்க வந்தா சரியா வீங்கன்னு அம்மா சொன்னாங்க அதனாலதான் இதுல எங்க வீட்டு லோகேஷன் அனுப்பி இருக்கேன் நீயும் முத்துவும் வந்துட்டு போங்க அவன் உங்க மேல ரொம்ப பாசமா இருக்கா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் ஸ்ருதி என்ன பண்ண போறீங்க என்று கேட்க இதில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது அவர்கிட்ட மாமா அத்தை கிட்ட எல்லாம் கேட்டுட்டு தான் பண்ணனும் என்று சொல்லுகிறார்.
விஜயா பார்வதியின் வீட்டைத் திறந்து வர சிந்தாமணியும் எங்க போயிட்டாங்க என்று கேட்கிறார் அவர்கள் ஏதோ அவார்ட் வாங்குறதுக்காக போயிருக்காங்க நான்தான் சாவி வாங்கி வச்சிருந்தேன் வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி இருவரும் உள்ளே உட்கார்ந்து பேசுகின்றனர். அப்போது மனோஜ் ரூமை முத்து மீனாவுக்கு கொடுத்த விஷயத்தை சிந்தாமணியிடம் சொல்லுகிறார் முதல்ல என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அதுவும் பணக்கார பொண்ணா இருக்கனும் ஒரே பொண்ணா இருக்கனும் கூட பொறந்தவங்க எல்லாம் யாரும் இருக்கக்கூடாது சொத்து எல்லாமே என் பையனுக்கு வரணும் என்று லிஸ்ட் போட உடனே சிந்தாமணி நீங்க ஆசைப்படுற மாதிரி பொண்ணு வீட்லயும் ஆசைப்படுவாங்க இல்ல மாஸ்டர் உங்க பையன் மேல எந்த தப்பும் இல்ல அவரு பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு உங்க சின்ன பையனும் வேலை பாத்துட்டு அவனோட பொண்டாட்டியும் பணக்கார மருமகள் எல்லாம் இருக்காங்க ஆனா என்ன முத்துவும் மீனாவும் தான் என்று தயங்க ஏன் அது உங்களுக்கு என்ன என்று விஜயா கேட்கிறார். உங்க குடும்பத்த பத்தி பொண்ணு வீட்டுல விசாரிக்கும் போது சாதாரண டிரைவரும் பூ கட்ற மருமகளும் வந்து சொல்லும்போது அவங்க யோசிக்க மாட்டாங்களா என்று கேட்கிறார்.
நீங்க கேக்குற இடத்துல இருந்து வர்றவங்க கண்டிப்பா இவங்கள பத்தி தெரிஞ்சா உங்க பையனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க என்று சொல்ல விஜயா பயப்படுகிறார் அந்த மீனாவை வீட்டை விட்டு எப்படியாவது துரத்திடுவேன் என்று சொல்ல விஜயாவும் சரியென சொல்லுகிறார் மீனாவை துரத்தினால் புருஷன் மட்டும் அமைதியா இருப்பானா என்று கேட்க அவனையும் சேர்த்து அனுப்ப வேண்டியது தான் என்று சொல்லுகிறார் உடனே சிந்தாமணி சந்தோஷப்படுகிறார்.விஜயா சிந்தாமணி இடம் என்ன கேட்கிறார்?அதற்கு சிந்தாமணி என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]