கதாநாயகனான் ஆகாஷ் முரளி மற்றும் நாயகியான அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இவர்களிடையே அவ்வப்போது சண்டைகளும் வந்து கொண்டு இருக்கிறது. ஆகாஷ் மற்றும் அதிதி இடையே நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஏற்படுவதால் இவர்களின் காதல் முறி. இந்த நிலையில் அதிதிக்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை கிடைக்கிறது இதனால் அவர் அங்கு செல்கிறார் சில வருடங்களுக்கு பிறகு ஆகாஷ் முரளிக்கு ஒரு செய்தி கிடைக்கிறது அதிதி போர்ச்சுக்களில் உள்ள பெரிய தொழிலதிபரை கொலை செய்த குற்றத்திற்காக ஆள் சிறையில் இருக்கிறார் என்று. இதை தெரிந்து கொண்ட அவர் அதிதியை காப்பாற்ற போர்ச்சுக்கல் செல்கிறார் உண்மையில் அதிதி தொழிலதிபரை கொலை செய்தாரா? தொழிலதிபருக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம்? அதிதியை காப்பாற்றினாரா ஆகாஷ் முரளி?இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆகாஷ் முரளி. முயன்ற அளவு அவரின் பங்கை சிறப்பாக நடித்து வெளிப்படுத்தியுள்ளார். காதல், எமோஷன் அலுகை என நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.அதிதி துருதுருவென நடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.அதேபோல் நடிகர் ராஜா சைலன்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார். முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். கல்கி கோச்சின் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
ரொமாண்டிக், திரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். விஷ்ணு வரதன் அவரது பாணியில் ஒரு காதல் கதையை இயக்கியுள்ளார் விஷ்ணு வரதன். கிளைமாக்ஸ் வரும் ட்விஸ்ட் பாராட்டிற்குறியவை.
யுவன் இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
கேமரான் எரிக்கின் ஒளிப்பதிவு மிகவும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
XB Film Creators தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…