விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்க்கிறார்கள். இந்த நாயுமும் குடும்பத்துடன் பாசமாக இருக்கிறது. ஒரு நாள் விபத்தில் மகள் கண்முன் அந்த நாய் இறக்கிறது.

இதனால் விஜய் சேதுபதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது. குறிப்பாக மகள், நாய் இறப்புக்கு தான்தான் காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறார். இறுதியில் சோகத்தில் இருந்து விஜய் சேதுபதி குடும்பம் மீண்டதா? மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மகள் மீது காட்டும் பாசத்தில் கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா, மகளை திட்டுவது, பாசம் காட்டுவது, விஜய் சேதுபதியுடன் கோபப்படுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் ரெஜினா.

மகளாக வரும் ஶ்ரீஜா விஜய் சேதுபதி, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

சிறிய கதையை சிறப்பாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுவாமி நாதன். தந்தை, மனைவி, மகள், நாய் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களை நடிக்க வைக்காமல் வாழ வைத்திருக்கிறார்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவும், ரெவாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘முகிழ்’ மகிழ்ச்சி.

Suresh

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

7 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

7 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

7 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

7 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

7 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

7 hours ago